Wednesday, 31 May 2017

தமிழர்களின் தொல்பாசனம் -ஒரு சிறு ஆசை

தமிழர்களின் தொல்பாசனம் -ஒரு சிறு ஆசை

சென்ற சனிக்கிழமை இந்த நூலை வாங்கினேன்

கரையாளர் உருவாக்கிய தொல் பாசனம் கூறித்தும் , அவர்கள் உருவாக்கி உலகத்தரம் வாய்ந்த நீர் மேலாண்மை குறித்தும் பேசுகிறது.

இதற்கு முன்னர் பல எழுத்தாளர்கள் கரையாளர்களை தவிர்த்தது போல அவ்வகை அரும்பணியை தான் இந்நூல் செய்துள்ளது.பொறியாளர்கள் மீது எந்த தவறும் இல்லாது தான் இந்த நூல் கூற முன்மொழிகிறது.

நேற்று தற்செயலாக ஆய்வின் அடிப்படையில் காரைக்குடி, கழநிவாசல் பர அழகன் குடும்பத்தினரிடம் விவரங்கள் சேகரித்த போது . அவர்களும் கரையாளர் இன குழுவினர்கள் தான் கழநிவாசல் பர அழகன் வாரிசுகளிடம் அலைப்பேசி வழியா பேச முற்பட்ட போது

அவர்கள் கூறிய தகவல்

ஒருமுறை மடையில் மலைப்பாம்பு இருப்பது தெரிந்தும் அதனை கத்தியால் கிழித்து கொன்று மடையத்திறந்தார் கழநிவாசல் பர அழகன்.

அவ்வகை மடைதிறந்த பின்னும் நீர் சரியாக வெளியேறாத காரணத்தால் அழகன் அவர்கள் மண்ணுக்குள் புதைந்து நீர் வெளிவரும் பாதை நோக்கி வெளிவர முற்பட இறந்தும் போகின்றார் .




இதை அறிந்த சேதுபதி மகாராஜா கழநிவாசல் பர அழகன் அவர்களின் உயிர் தியாகத்தின் வசம் இருக்கும் உண்மையான தொண்டினையும்,சக்கரைக்கோட்டை கண்மாயை வெட்டினார் என்ற காரணத்தையும் மையமாக வைத்து இறந்தும் போன கரையாளர் அழகன் அவர்களுக்கு ஆறாயிரம் ஏக்கர் நிலம் தானமா கொடுத்துள்ளார்.அதற்கான ஆதார தரவு இன்றும் வரை வாரிசு தாரர்களிடம் இருக்கிறது என்றும் தொண்டு தாட்டு நாங்க தான் மடை வேளை பார்த்தோம் என்று கூறி வருகிறார்.

இது போல ஒரு வரலாறு எனது முன்னோர்கள் வசமும் இருந்துள்ளது ...

*மண்ணுக்குள் புகுந்து சென்று எதிரியை தாக்கும் ஒரு போர் முறையை கரையாளர்கள் இம்மண்ணுக்கு வழங்கிய போர் யுத்தியாக இன்று வரை பார்க்கப்பட்டு வருகின்றது.

*60ஊர்களை பாதுகத்த கரையாளர்களுக்கு மடைத்திறப்பில் வீர மரணம் அடையும் போது அவர்களுக்கு நடுகல் நடப்பட்டுள்ளது என்று கூறுகிறது வரலாறு.

*மாடக்குளம் கம்மாய் மடையை கரையாளர்கள் சரியாக பராமரிப்பு வசம் ஈடுபட வில்லை என்றால் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கூட நீரில் மூழ்கி போக வாய்ப்புள்ளது என்கிறது புவியில்

நீர் வெளிவரும் மடையோ அல்லது கம்மாயின் உட்புறம் 50அடி தொலைவில் உள்ள மடைக்கல்லாக இருக்கட்டும் கரையாளர்களுக்காக தான் நடப்பட்டுள்ளது. அதை மன்னர்கள் 7ஆம் நூற்றாண்டு தொடங்கி 13 வரை மடைக்கல் நிறுவும் பணியை செய்துள்ளார்கள். ஆனால் நெல் தோன்றிய காலம் தொட்டே நீர் மேலாண்மை அனைத்து நாகரிகங்களில் இருந்துள்ளது. அதை தொல்குடி கரையாளர்களே பராமரிப்பு செய்து வருகின்றனர்.

இப்படி கரையாளர்களை தவிர்த்து ஒரு தமிழ் நிலத்தின் வரலாற்று உள்ளது என்றால் அது தமிழர்களுக்கு ஒட்டாத நாகரிகமான வரலாறாக தான் இருக்க முடியும்.

No comments:

Post a Comment

S .பரியேரும் பெருமாள் BA.B.L - திரைப்பட விமர்சனம்

ஜோதி மகாலட்சுமி (ஜோ)  என்ற பெண்வழி சமூகத்தை மையாக வைத்து  பரியனும், ஜோவின் தந்தையும் தங்களை அளந்து பார்த்துக்கொள்கிறார்கள் . ...