Wednesday, 31 May 2017

மதுரை பெருங்குடி அம்பேத்கர் சிலை வரலாறு



மதுரை பெருங்குடி அம்பேத்கர் சிலை வரலாறு


விமான நிலையத்திற்காக நிலத்தை கையாக படுத்தும் பொது, 1978 களில் மாவீரன் மலைசாமி தலைமையில் சின்ன உடைப்பு , பெருங்குடி , அவனியாபுரம் போன்ற கிராமத்து மக்கள்.மத்திய அரசுவிடம் வைத்த கோரிக்கை புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் பெயரை மதுரை விமான நிலையத்திற்கு வைக்கவேண்டும் என்றனர்.


இதை முன்னால் பகுஜன் சமாஜ் கட்சியின்(B.S.P) நாடாளுமன்ற உறுப்பினர் பிரமோத் குரில் அவர்கள் ராஜா சபாவில் மதுரை விமானம்
நிலையம் பெயர் சர்ச்சை எழும்போது பேசி இருகின்றார்


இத்தகைய கோரிக்கை 1978களில் மக்கள் மத்தியில் எழும்போதும்


* 23.7.1983 அன்று மதுரை தெற்கு தாலுகா பெருங்குடி கிராமத்தை சேர்ந்த ஏழை தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அளிக்கப்பட்ட பட்டா நிலத்தை ஆக்ரமித்துவர்களை எதிர்த்து நடத்திய போரட்டத்தில் திரு A.மலைச்சாமி அவர்களின் பங்களிப்பு மிகவும் குறிபிட்ட தக்கது.

* ஆகாய விமான நிலையத்தில் டாக்டர். அம்பேத்கர் அவர்களுக்கு மதுரை மாவட்டத்தில் முதல் சிலை பெருமை திரு A. மலைச்சாமியையே சாரும்.பல இடர்பாடுகளுக் கிடையில் அஞ்சாமல் சிலை அமைத்தார் இதில் அவருக்கு பெரும் இழப்பு அநேகம் இருப்பின்னும் தான் நினைத்ததை முடித்து காட்டினார் திரு A.மலைச்சாமி அவர்கள் என்று இறையியல் கல்லூரியின் அன்றைய முதல்வர் கம்பர் மாணிக்கம் A.மலைச்சாமி B.A.B.L அவர்களின் வீர வரலாற்று வாழ்கை சுருக்கம் நூலில் எழுதி இருகின்றார்


பாரதிய தலீத் பேந்தர் இயக்கத்தின்(விடுதலை சிறுத்தைகள்) சார்பாக விமான நிலையம் ஆரம்ப நுழைவாயிலில் புரட்சியாளர் அம்பேட்கர் அவர்களின் சிலை நிறுவப்பட்டுள்ளது.


இதுவே தென் தமிழகத்தின் முதல் புரட்சியாளர் அம்பேட்கர் அவர்களின் திருவுருவ சிலை. அதை திறந்து வைத்தார் புரட்சியாளர் அம்பேட்கர் அவர்களின் மனைவி சபிதா அம்பேட்கர் மற்றும் அதன் தேதி 2 செப்டம்பர் 1986 திறக்கப்பட்டது.
அதற்கான தரவு தான் புகைபடத்தில் இருக்கின்றது. இதில் இருக்கும் முக்கிய பெயர்கள் அனைத்தும் அம்பேத்கர் சிலை உடைகொள்ளும் வரை கல்வெட்டுகளில் இருந்தது..
 அன்று நிறுவப்பட்ட சிலைக்கு சாதி வெறியர்களிடம் இருந்து பலவகை
எதிர்ப்பு வந்தது. அதில் ஜாதி வெறியர்கள் சார்பாக (அ) குரலாக சிலை வைக்க எதிர்ப்பை வெளிபடுத்தியவர் திரு.அய்யங்களை அவர்களே என்று ஐயா பந்தல்குடி நடராஜன் அவர்களிடம் திரு A.மலைச்சாமி கூறி இருகின்றார்.


இதுவே வரலாற்று சிறப்பு வாய்ந்த மதுரை பெருங்குடி அம்பேத்கர் சிலை வரலாறு.

No comments:

Post a Comment

S .பரியேரும் பெருமாள் BA.B.L - திரைப்பட விமர்சனம்

ஜோதி மகாலட்சுமி (ஜோ)  என்ற பெண்வழி சமூகத்தை மையாக வைத்து  பரியனும், ஜோவின் தந்தையும் தங்களை அளந்து பார்த்துக்கொள்கிறார்கள் . ...