Wednesday, 5 August 2015

எம்மை தலைநிமிர்த்திய சுட்ட வெயில் - அனுபவ தொடர்

எம்மை தலைநிமிர்த்திய சுட்ட வெயில். 

குறும்படங்களை அதிகம் யாருமே பார்க்க கூடமாட்டர் என்று தெரிந்தும். சுட்டில் ஒதுங்கூட நிழலே இல்லாத அந்த மொட்டை மலையில், அடித்த கடினமான வெயிலும் என் படைப்புகள் மீது நம்பிக்கை வைத்து என்னோடு பயணித்த கதாபத்திரங்களின் உழைப்பே மற்றவர்களை பேசவைத்துள்ளது 



"குறியீடு" படத்தி
ல் பணியாற்றிய ஒளிப்பதிவாளர்க்கு மிகவும் குறைந்த வயதே. இன்னும் சொல்லவேண்டும் என்றால் பள்ளி கல்வி முடித்து, கல்லுரியில் முதலாம் ஆண்டு படித்துகொண்டு இருக்கும் மாணவர். எத்தனை குறும்படத்தில் பணியாற்றி இருப்பர் என்றுகூட சொல்ல முடியாது. ஆனால் அவரை நான் தேர்வுசெய் ஒரு பிரேம் போதுமானதாக இருந்தது.

ஒரு பெண் கதாபத்திரத்தை தவிர யாருக்கும் எந்த தொகையும் வழங்கப்படவில்லை.ஆனால் முந்தைய நாளே அறிவிப்பை எனது உதவி இயக்குனர் சொல்லி விடுவார் காலை 6 மணிக்கு வந்துவிட வேண்டும் என்று. அதன் படியே ஒருவர் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்தும், ஒரு பெண்மணி நாகர்கோவிலில் இருந்தும், படத்தில் வேலைசெய்த டெக்னிசியன்களை, உதவி இயக்குனர்களை மற்றும் இதர நடிகர்களை அள்ளிபோட்டுகொண்டு. ஒரு முதியவர் தனது அம்பாசிடரில் காலை 6மணிக்கு லோக்கேசனுக்கு வந்துவிடுவர்

காலை உணவிற்குள், அன்று எடுக்கவேண்டிய காட்சியில் ஐந்து ஷோட்கள், முன்று அல்லது நான்கு டேக்களோடு முடிந்திருக்கும். காலை வேலை போதிய உணவு கூட இருக்காது, மீண்டும் ஷூட்திற்கு செல்வோம். இப்படி பார்த்து பார்த்து பதிவு செய்த படமே "அந்த அம்மா செமயா நடிச்சு இருக்கு, அந்த ஹீரோ தம்பி யாரு ஏதும் படத்தில் நடித்துள்ளாரா என்று பேசவைத்துள்ளது". 





படத்தின் முதல்கட்ட பெயர் பதிவின் பொழுது மனோதத்துவத்தின் தந்தை சிக்மென்ட் பிராயிடு அவர்களுக்கு நன்றி என்றே படம் ஆரம்பமாகும். 

நடைமுறை வாழ்வில் கதையோடு எந்த தொடர்பும் இல்லாத நபர்களை, எதார்த்த பாத்திரமாக மாற்றி கதையின் அடிப்படையில் பயணமிட வைக்கவேண்டும். எந்த ஒரு வசனமும் பேசாமல் காதல், கோபம் இந்த இரண்டையும் உணர்வுகளில் இருந்து வெளிப்படுத்த வேண்டும் காரணம் "குறியீடு" 30 நிமிடம் மௌன திரைப்படம்.

ஒரு சமயம் காட்சிகள் எடுத்தவண்ணம் இருக்கின்றோம், அது அடர்ந்த கள்ளிச்செடிகள் நிறைந்த காடு அதில் படர்ந்து கிடக்கும் கற்கள் வரைமுறை அற்றவை. எங்கள் படக்குழுவிற்கு சமந்தம் இல்லாத நபர் எங்களை நோக்கி வந்து "இங்கே படபுடிப்பு நடத்த யார்,அனுமதி தந்தனர் என்று" கேட்க. நன்றாக சென்ற படப்புடிப்பு சற்று நேரம் நிறுத்தப்பட்து.அதை சுதாரித்த அந்த நபர் ஒரு மப்டி போலிஸ் என்று கூட எங்களுக்கு தெரியாது. தன்னிடம் இருக்கும் அலைபேசியில் அருகில் இருந்த காவல் நிலையத்தில் இந்த தகவலை பதிவு செய்து எங்களின் முகவரி கேட்டுகொண்டு சென்றுவிட்டார்.

மீண்டும் படப்புடிப்பு தொடங்கி அடுத்த 30 நிமிடத்தில் பெரும் காவல் படை எங்களை நோக்கிவந்து வந்தது, அதில் இருக்க காவல்துறையினர் கைகளில் பாதுகாப்பு கவசங்களும் இருந்தது.இந்த படையை ஒரு பெண் s.i வழிநடத்தி வந்தார். மீண்டும் அவரிடம் பேசிக்கொண்டு இருக்க, உங்களை பார்த்தாள் "மிகவும் சந்தேகமாக இருக்கின்றது" என்று சொல்லும் அளவுக்கு எங்கள் உடை அலங்காரம் இருந்தது. ஒருவழியாக இந்த பேச்சுவார்த்தை தான் இறுதி நிலையை அடைந்து மீண்டும் படப்புடிப்பு தொடங்கியது.

இது போல பல தடைகள் மிக எளிதாக தலையில் சுமந்து எனது கதாநாயகன்,உதவி இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் துணையோடு நடந்தேன்.இந்த பயணமே இன்று என்னை வேற்று வகையான இடங்களில் நிறுவிக்கொண்டது. 



இந்த அனுபவத்தை உங்களோடு சேர்ந்து கொண்டாட  "குறியீடு" படம் வெளியீடு நிகழ்வில் பங்கேற்க உங்களை அன்போடு அழைகின்றேன்.

No comments:

Post a Comment

S .பரியேரும் பெருமாள் BA.B.L - திரைப்பட விமர்சனம்

ஜோதி மகாலட்சுமி (ஜோ)  என்ற பெண்வழி சமூகத்தை மையாக வைத்து  பரியனும், ஜோவின் தந்தையும் தங்களை அளந்து பார்த்துக்கொள்கிறார்கள் . ...