Wednesday, 17 June 2015

"உறைந்த பாதை" கவிதை

                                                            "உறைந்த பாதை" 

அந்த அழகியை பார்க்க 
நீண்ட நாள் ஆனது. 

அந்த பனி பெய்தா ஊரில்,                                                 
அன்று மலை பெய்த்து.

அவள் வெள்ளை நிறம் சால்வை
போர்த்திய கருப்பு நிறத்தழகி.

கண்ணின் கருவிழி மட்டுமே உருண்டது
அருந்த தேனீர் வேண்டும் என்று.

என்னை கடந்து சென்று அவள் அமர
மேனியில் பூசிய மணக்கும் வாசனை திரவம்.


அந்த மழைதுளிகள் பட்டு,
அவ்விடத்தை வாசனை இடுகாடாக மாற்றியது
என்னை கட்டையில் அடுக்கி, தீயிட்டு விட்டது.

அவள் நெற்றியில் படர்ந்த மழைதுளிகள்
கண்ணில் இரங்கி கண்ணம் நோக்கி வரும்போது என்னால் சொல்ல முடியவில்லை.

கண்ணை மூடி திறந்தேன்
அவளோ சென்றுவிட்டால்
நானோ அவள் வந்த பாதை நோக்கி காத்திருக்கின்றேன்

புகைப்படம்:எனது பயணத்தின் போது நான் கிளிக் செய்து, புகைப்படத்திற்காக எழுதப்பட்ட வரிகள்.

No comments:

Post a Comment

S .பரியேரும் பெருமாள் BA.B.L - திரைப்பட விமர்சனம்

ஜோதி மகாலட்சுமி (ஜோ)  என்ற பெண்வழி சமூகத்தை மையாக வைத்து  பரியனும், ஜோவின் தந்தையும் தங்களை அளந்து பார்த்துக்கொள்கிறார்கள் . ...