புறம்போக்கு என்ற பொதுவுடைமை திரைப்பட விமர்சனம்
இந்தியா விடுதலைக்கு பின்னர் 1980களில் தேசிய அளவில் "உழுதவனுக்கே நிலம் சொந்தம்" என்ற கொள்கையை தலித் பேந்தர்கள் மற்றும் நக்சல்பாரி இயக்கங்கள் பேசிவந்த சமயம்.அச்சமயத்தில் தமிழகத்தில்நிலப் பிரபுத்து வாதிகளுக்கு, காங்கிரஸ் விரித்த சிவப்பு கம்பளத்தை மிஞ்சுவதற்காக பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாருக்கு இறந்தார்க்கு பின்னர் தமிழ்நாட்டு நிலப் பிரபுத்து வாதிககளுக்குதங்க கம்பளம் விரித்து கட்சியை வளர்த்தவர்கள் திராவிட அரசியல்வாதிகள்.
உழுதவனுக்கே நிலம் சொந்தம் என்ற முர்கதனமான தலைமறைவு அரசியல், தங்களது ஆட்சி அதிகாரத்தை அசைத்துவிட கூடும் என்று அதனை அணுவணுவாக அழிக்கும் வேலையை செய்யத்தொடங்கினர்.
அதன் மூலமாக ஓட்டுவங்கியை தக்கவைக்க, ஒரு ஜாதிக்கு ஒரு தலைவன் என்ற முறையை நிறுவி, மண்ணின் பூர்வகுடி மக்களுக்கு அயராது உழைத்த தலைமறைவு வாழ்கையில் இடுபட்ட தோழர்களை தனிமைபடுத்தி, அழித்தொழித்து. அவ்அரசியலுக்கு உதவிகரமாக இருந்த தோழர்களுக்கு உயிர்பலிகளை காணிக்கையாக மாற்றியமைத்து.
எந்த ஒரு தருணத்திலும் பெரியமாற்றம் செய்யமுடியத வலக்கை,இடக்கை கம்யூனிஸ அரசியலை கையில் வைத்துகொண்டு. அரசியல் விருட்சம் கண்ட தமிழ் நாட்டு திராவிட அரசியலும், மற்ற மாநிலத்து ஆட்சி அதிகார அரசியலும், தங்கள் கைவசம் வைத்துள்ள அரசு இயந்திர தோட்டா மற்றும் தூக்குகயிற்றால். அழித்தொழிந்த, லட்சம் தோழர்களிளில் ஒருவரது கதையே, புறம்போக்கு என்ற பொதுவுடைமை.
தூக்கு தண்டனை என்ற அரசின் பயங்கரவாத கொலையை நோக்கி சுழற்றபடும் நான்கு தனிமனித உளவியல் மற்றும் செயல் நகர்வே புறம்போக்கு என்ற பொதுவுடைமை. இப்படத்தை இயக்கிய தோழர் ஜனநாதன்,மக்களுக்கான எதார்த்த அழகியல் கலவையை உலகசினிமா வரிசையில் நிறுத்தியதற்கு செவ்வணக்கம்(RED SALUTE) பொருந்திய நன்றியை சொல்லவேண்டும்.
ஷியாம் அரசுக்கு எதிராக எந்த நிகழ்வு நடந்தாலும் அது தீமை என்று, அவை அனைத்திற்கு ஒரே தீர்வு கொடூர தண்டனைகள் மட்டுமே என்று, தனது வாழ்நாளில் எப்படியும் ஒரு தேச விரோத குற்றவாளிக்கு தூக்குதண்டனை நிரைவேற்றிய பெருமை தனக்கு இருக்கவேண்டும் என்ற கௌரவர அதிகாரப்பிடியில் உள்ள போலீஸ் அதிகாரி மெக்கலேய் .
கார்த்திகா வறுமையின் பிடியில் சிக்கிய கிராமத்திற்கு உதவி செய்யவந்த, தோழர்களின் கொள்கையில் தன்னை இனைத்துக்கொண்ட பெண் இயக்கவாதி குயிலி. (பிறந்த நாட்டிற்காக தன்னையே மாய்த்துக்கொண்ட முதல் பெண் தற்கொலை படை போராளி குயுலி) .
விஜய் சேதுபதியின் தந்தை இளம்வயதில் இறந்துவிட, அவர் செய்துவந்த தூக்குதண்டனை என்ற அரசின் கௌரவ கொலையை செய்யும் பொறுப்பை ஏற்கின்ற சேரிவாழ் இளைஞனான எமலிங்கம்.
ஆர்யா மக்களுகான தேவைகளில் போராடி, மக்களுக்காகவே இறுதி மூச்சு வரை வாழ்ந்து மார்சிய அரசியலே மக்களின் தீர்வு என்று ஓங்கிஒலிக்கும் மக்கள் தோழனாக. அரசு இயந்திரந்தின் அடக்குமுறைக்கு, ஒரு போதும் அஞ்சி தனது பாதையை மாற்றிக்கொள்ளா மக்கள் விடுதலைக்காக தன்னை மாய்த்துக்கொள்ளும் நெஞ்சுரம் கொண்ட ஒரு தோழனான பாலுவாகவும் கதை முழுவதும் பயணிக்கின்றனர்.
இந்த நான்கு கதாபாத்திரத்தை வைத்து, வெள்ளைகாரர்கள் ஆட்சி காலத்தில் இருந்துவந்த தூக்குத்தண்டனை முறையை, இந்தியா தேசத்தை விட்டு அப்புறபடுத்த. இதுவரை யாருமே எடுக்காத ஒரு முயற்சியை இயக்குனர் தனது சொந்த தயாரிப்பில் எடுத்திருப்பதே, தான் பிறந்த மண்ணுக்கு, வளர்ந்த நாட்டிற்கும் ஆற்றும் சிறந்த பங்கு , காலத்தால் அழியாத தமிழ் உலக திரைப்படம் என்று நம்மை சொல்லவைக்கின்றது.
படத்தில் வரும் வசனங்கள், தங்களை சுற்றி என்ன நடக்கின்றது என்றே தெரியாமல் பணமே வாழ்க்கை என்று வாழும் சாமனிய மனிதனுக்கு, காவல்துறை அடக்குமுறைகளை ஆர்யா மற்றும் ஷியாம் வைத்து பேசியிருப்பதும், மீடியாவுக்கு ஒரு தலைவனை உருவாக்கும் தமிழ் தேசிய அரசியலால் , தீர்வே இல்லை என்ற வசனத்தை கார்த்திகா தான் தோழர்களோடு விவாதிப்பதே. இப்படத்தின் வசனம் எவ்வளவு கூர்மையானது என்று நாம் உணரமுடியும்.
திரைக்கதை காட்சி (SCREENPLAY) ஒருவரின் வழியை கண்கூடாகப் பார்க்காமல், அவற்றை யாரும் உணரமுடியாது என்பதற்காக பொருத்தப்படும் காட்சிகள் மட்டுமே, ஒரு பெரும் தாகத்தை உருவாக்க முடியும் என்ற அடிப்படை உளவியலை இயக்குனர் பல கட்சிகளில் தெளிவுபடுத்தி இருகின்றார். “தம்பி நான் நிரபராதி” என்று தூக்குமேடையில் வைத்து ஒரு கைதி சொல்வது, ஆரியாவின் தூக்கு பரிசோதனை, தூக்கு தண்டனை நிறைவேறும் சமயம்,தான் நம்பிக்கை துரோக கொலை செய்தவிட்டோம் என்று விஜய் சேதுபதி கதறி அழுகும் காட்சி, இறுதியாக ரயில் தண்டவாளத்தில் விஜய் சேதுபதி மனநலம் பாதிக்கப்பட்ட நபராக மாறுவது போன்ற இடங்களில் திரைக்கதை உருவகம் நாம் உணர்வோடு பயணிக்கின்றது.
படத்தின் பக்கபலமாக: இயக்குனர் ரசனையோடு கலை இயக்குனர் காட்சி நகர்வுக்காக தேர்ந்தேடுத்த இடங்கள்(locations ) மிக அருமை. விஜய் சேதுபதியின் வீடு,தூக்கு மேடை,சிறைச்சலை உருவாக்கம் போன்ற காட்சியமைப்பு ரசித்து பார்க்க வைகின்றது. கதை களத்தை கேமரா தெளிவாக பதிவுசெய்துள்ளது. நமது கண்ணில் எங்கு கண்ணீர் வரவேண்டும் என்று தீர்மாணிக்கும் பொறுப்பு ஒளிப்பதிவு வசம் சென்றுள்ளது.பிண்ணனி இசை எந்த காட்சியிலும் காட்சியமைப்பை மிஞ்சாமல், தூக்கு தண்டனையின் வலியை நமக்கு தூவிவிட்டு சென்றுள்ளது. நடணங்கள் மனதில் நின்ற அளவு, பாடல்கள் மனதில் நிற்கவில்லை.
மீண்டும் அழகா வந்துவிட்டார் ஷியாம், போலீஸ்காரர் தோற்றத்திற்கான உடல் வடிவாக்கம், கோபம் என்று படம் முழுவதும் கம்பீரமாக வருகின்றர். இருப்பினும் விஜய் சேதுபதிக்கே இந்த களத்தில் வெற்றி, ஒரு சிறந்த நடிகன் என்பதை நிருபிக்க இறுதி காட்சி ஒன்றுபோதும்.. ஏன்னா ஒரு நடிப்பு விஜய்சேதுபாதி.......ப்பா.
இயற்கை, ஈ, பேராண்மைக்கு போன்ற படங்களுக்கு பிறகு, தேசியம் தழுவிய ஒடுக்குமுறையை இரண்டரை மணி நேரம் மக்களுக்கு அரசியல் படமாக இயக்குனர் எடுத்த கம்யூனிஸ் பாதை. இன்று பல திரைவடிவங்களில் நம்மோடு பேசப்பட்டு வருகின்றது,, இருப்பினும் அதை முதலில் பேச ஆரம்பித்த தோழர் ஜனநாதன் அவர்களுக்கு மணிமகுடம் சூட்டியே ஆகவேண்டும்.
இந்தியா விடுதலைக்கு பின்னர் 1980களில் தேசிய அளவில் "உழுதவனுக்கே நிலம் சொந்தம்" என்ற கொள்கையை தலித் பேந்தர்கள் மற்றும் நக்சல்பாரி இயக்கங்கள் பேசிவந்த சமயம்.அச்சமயத்தில் தமிழகத்தில்நிலப் பிரபுத்து வாதிகளுக்கு, காங்கிரஸ் விரித்த சிவப்பு கம்பளத்தை மிஞ்சுவதற்காக பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாருக்கு இறந்தார்க்கு பின்னர் தமிழ்நாட்டு நிலப் பிரபுத்து வாதிககளுக்குதங்க கம்பளம் விரித்து கட்சியை வளர்த்தவர்கள் திராவிட அரசியல்வாதிகள்.
உழுதவனுக்கே நிலம் சொந்தம் என்ற முர்கதனமான தலைமறைவு அரசியல், தங்களது ஆட்சி அதிகாரத்தை அசைத்துவிட கூடும் என்று அதனை அணுவணுவாக அழிக்கும் வேலையை செய்யத்தொடங்கினர்.
அதன் மூலமாக ஓட்டுவங்கியை தக்கவைக்க, ஒரு ஜாதிக்கு ஒரு தலைவன் என்ற முறையை நிறுவி, மண்ணின் பூர்வகுடி மக்களுக்கு அயராது உழைத்த தலைமறைவு வாழ்கையில் இடுபட்ட தோழர்களை தனிமைபடுத்தி, அழித்தொழித்து. அவ்அரசியலுக்கு உதவிகரமாக இருந்த தோழர்களுக்கு உயிர்பலிகளை காணிக்கையாக மாற்றியமைத்து.
எந்த ஒரு தருணத்திலும் பெரியமாற்றம் செய்யமுடியத வலக்கை,இடக்கை கம்யூனிஸ அரசியலை கையில் வைத்துகொண்டு. அரசியல் விருட்சம் கண்ட தமிழ் நாட்டு திராவிட அரசியலும், மற்ற மாநிலத்து ஆட்சி அதிகார அரசியலும், தங்கள் கைவசம் வைத்துள்ள அரசு இயந்திர தோட்டா மற்றும் தூக்குகயிற்றால். அழித்தொழிந்த, லட்சம் தோழர்களிளில் ஒருவரது கதையே, புறம்போக்கு என்ற பொதுவுடைமை.
தூக்கு தண்டனை என்ற அரசின் பயங்கரவாத கொலையை நோக்கி சுழற்றபடும் நான்கு தனிமனித உளவியல் மற்றும் செயல் நகர்வே புறம்போக்கு என்ற பொதுவுடைமை. இப்படத்தை இயக்கிய தோழர் ஜனநாதன்,மக்களுக்கான எதார்த்த அழகியல் கலவையை உலகசினிமா வரிசையில் நிறுத்தியதற்கு செவ்வணக்கம்(RED SALUTE) பொருந்திய நன்றியை சொல்லவேண்டும்.
ஷியாம் அரசுக்கு எதிராக எந்த நிகழ்வு நடந்தாலும் அது தீமை என்று, அவை அனைத்திற்கு ஒரே தீர்வு கொடூர தண்டனைகள் மட்டுமே என்று, தனது வாழ்நாளில் எப்படியும் ஒரு தேச விரோத குற்றவாளிக்கு தூக்குதண்டனை நிரைவேற்றிய பெருமை தனக்கு இருக்கவேண்டும் என்ற கௌரவர அதிகாரப்பிடியில் உள்ள போலீஸ் அதிகாரி மெக்கலேய் .
கார்த்திகா வறுமையின் பிடியில் சிக்கிய கிராமத்திற்கு உதவி செய்யவந்த, தோழர்களின் கொள்கையில் தன்னை இனைத்துக்கொண்ட பெண் இயக்கவாதி குயிலி. (பிறந்த நாட்டிற்காக தன்னையே மாய்த்துக்கொண்ட முதல் பெண் தற்கொலை படை போராளி குயுலி) .
விஜய் சேதுபதியின் தந்தை இளம்வயதில் இறந்துவிட, அவர் செய்துவந்த தூக்குதண்டனை என்ற அரசின் கௌரவ கொலையை செய்யும் பொறுப்பை ஏற்கின்ற சேரிவாழ் இளைஞனான எமலிங்கம்.
ஆர்யா மக்களுகான தேவைகளில் போராடி, மக்களுக்காகவே இறுதி மூச்சு வரை வாழ்ந்து மார்சிய அரசியலே மக்களின் தீர்வு என்று ஓங்கிஒலிக்கும் மக்கள் தோழனாக. அரசு இயந்திரந்தின் அடக்குமுறைக்கு, ஒரு போதும் அஞ்சி தனது பாதையை மாற்றிக்கொள்ளா மக்கள் விடுதலைக்காக தன்னை மாய்த்துக்கொள்ளும் நெஞ்சுரம் கொண்ட ஒரு தோழனான பாலுவாகவும் கதை முழுவதும் பயணிக்கின்றனர்.
இந்த நான்கு கதாபாத்திரத்தை வைத்து, வெள்ளைகாரர்கள் ஆட்சி காலத்தில் இருந்துவந்த தூக்குத்தண்டனை முறையை, இந்தியா தேசத்தை விட்டு அப்புறபடுத்த. இதுவரை யாருமே எடுக்காத ஒரு முயற்சியை இயக்குனர் தனது சொந்த தயாரிப்பில் எடுத்திருப்பதே, தான் பிறந்த மண்ணுக்கு, வளர்ந்த நாட்டிற்கும் ஆற்றும் சிறந்த பங்கு , காலத்தால் அழியாத தமிழ் உலக திரைப்படம் என்று நம்மை சொல்லவைக்கின்றது.
படத்தில் வரும் வசனங்கள், தங்களை சுற்றி என்ன நடக்கின்றது என்றே தெரியாமல் பணமே வாழ்க்கை என்று வாழும் சாமனிய மனிதனுக்கு, காவல்துறை அடக்குமுறைகளை ஆர்யா மற்றும் ஷியாம் வைத்து பேசியிருப்பதும், மீடியாவுக்கு ஒரு தலைவனை உருவாக்கும் தமிழ் தேசிய அரசியலால் , தீர்வே இல்லை என்ற வசனத்தை கார்த்திகா தான் தோழர்களோடு விவாதிப்பதே. இப்படத்தின் வசனம் எவ்வளவு கூர்மையானது என்று நாம் உணரமுடியும்.
திரைக்கதை காட்சி (SCREENPLAY) ஒருவரின் வழியை கண்கூடாகப் பார்க்காமல், அவற்றை யாரும் உணரமுடியாது என்பதற்காக பொருத்தப்படும் காட்சிகள் மட்டுமே, ஒரு பெரும் தாகத்தை உருவாக்க முடியும் என்ற அடிப்படை உளவியலை இயக்குனர் பல கட்சிகளில் தெளிவுபடுத்தி இருகின்றார். “தம்பி நான் நிரபராதி” என்று தூக்குமேடையில் வைத்து ஒரு கைதி சொல்வது, ஆரியாவின் தூக்கு பரிசோதனை, தூக்கு தண்டனை நிறைவேறும் சமயம்,தான் நம்பிக்கை துரோக கொலை செய்தவிட்டோம் என்று விஜய் சேதுபதி கதறி அழுகும் காட்சி, இறுதியாக ரயில் தண்டவாளத்தில் விஜய் சேதுபதி மனநலம் பாதிக்கப்பட்ட நபராக மாறுவது போன்ற இடங்களில் திரைக்கதை உருவகம் நாம் உணர்வோடு பயணிக்கின்றது.
படத்தின் பக்கபலமாக: இயக்குனர் ரசனையோடு கலை இயக்குனர் காட்சி நகர்வுக்காக தேர்ந்தேடுத்த இடங்கள்(locations ) மிக அருமை. விஜய் சேதுபதியின் வீடு,தூக்கு மேடை,சிறைச்சலை உருவாக்கம் போன்ற காட்சியமைப்பு ரசித்து பார்க்க வைகின்றது. கதை களத்தை கேமரா தெளிவாக பதிவுசெய்துள்ளது. நமது கண்ணில் எங்கு கண்ணீர் வரவேண்டும் என்று தீர்மாணிக்கும் பொறுப்பு ஒளிப்பதிவு வசம் சென்றுள்ளது.பிண்ணனி இசை எந்த காட்சியிலும் காட்சியமைப்பை மிஞ்சாமல், தூக்கு தண்டனையின் வலியை நமக்கு தூவிவிட்டு சென்றுள்ளது. நடணங்கள் மனதில் நின்ற அளவு, பாடல்கள் மனதில் நிற்கவில்லை.
மீண்டும் அழகா வந்துவிட்டார் ஷியாம், போலீஸ்காரர் தோற்றத்திற்கான உடல் வடிவாக்கம், கோபம் என்று படம் முழுவதும் கம்பீரமாக வருகின்றர். இருப்பினும் விஜய் சேதுபதிக்கே இந்த களத்தில் வெற்றி, ஒரு சிறந்த நடிகன் என்பதை நிருபிக்க இறுதி காட்சி ஒன்றுபோதும்.. ஏன்னா ஒரு நடிப்பு விஜய்சேதுபாதி.......ப்பா.
இயற்கை, ஈ, பேராண்மைக்கு போன்ற படங்களுக்கு பிறகு, தேசியம் தழுவிய ஒடுக்குமுறையை இரண்டரை மணி நேரம் மக்களுக்கு அரசியல் படமாக இயக்குனர் எடுத்த கம்யூனிஸ் பாதை. இன்று பல திரைவடிவங்களில் நம்மோடு பேசப்பட்டு வருகின்றது,, இருப்பினும் அதை முதலில் பேச ஆரம்பித்த தோழர் ஜனநாதன் அவர்களுக்கு மணிமகுடம் சூட்டியே ஆகவேண்டும்.
No comments:
Post a Comment