Wednesday, 17 June 2015

நாட்களின் அனுபவங்கள்

குளிரில் பயணித்தேன் 1

இன்னும் இங்கே 
சூரியன் வரவில்லை, 

இங்கே அனைவரும் குளிரில் 
ஒய்வெடுத்து 
வருகின்றனர், 

கண்ணில் எரிச்சல்
 இல்லா முழப்பு, 

குளிர்ந்த நீரில் 
கால்கள் பரவ, 
உடனே புத்துணர்வு .. 

காலை அருந்திய இனிப்பிலா
தேனீர் இந்தநாள் ஆரம்பம்....


குளிரில் பயணித்தேன் 2

காதுகளில் பணிமூட்டம்                                       

வந்து தஞ்சம் அடைய, 

வழியெங்கும் பரவிக்கிடக்கும்
 தேயிலை தோட்டம்,

அதன் நடுவே 
பயணித்த வாகன ஓட்டம்.

அந்த வழித்தடம் எனது முன்னோர்கள் 
 இட்ட வேர்வையும்,ரத்தமும்.
இப்பாதைகளிள் வழிந்தோடிய காலமே, 


 "எரியும் பணிக்காடு" வரலாறுகளே 
என்று  மனம் சொன்னது ..........

No comments:

Post a Comment

S .பரியேரும் பெருமாள் BA.B.L - திரைப்பட விமர்சனம்

ஜோதி மகாலட்சுமி (ஜோ)  என்ற பெண்வழி சமூகத்தை மையாக வைத்து  பரியனும், ஜோவின் தந்தையும் தங்களை அளந்து பார்த்துக்கொள்கிறார்கள் . ...