குறியீடு -திரையில் எதாா்த்தமும் புரட்சியும்..
****தோழா் கனகவேல் ராஜன் பா.மு
****தோழா் கனகவேல் ராஜன் பா.மு
எனக்கு இருக்கும் இணைய வசதியை கொண்டு என்னால் படங்களை எல்லாம் பாா்க்க முடியாது. அந்த அளவிற்கு நான் என் பணத்தை படத்திற்காக செலவு செய்வதில்லை.. அதில் ஆா்வமும் இல்லை..
ஆனாலும் நண்பாின் (தோழா் வினோத் மிஸ்ரா ) அவா்களின் நடமுறை அரசியல் நோக்கம் அவாின் திரை கலையில் ஒன்றுகிறதா? அல்லது வனிக நோக்கத்தில் அந்த கொள்கை கரைந்து காலாவதியாகிறதா? என்று பாா்க்க வேண்டும் என்ற ஒரு விமா்சன நோக்கத்தில் படம் பாா்த்தேன்..
தீ பந்தம் எப்படி திசையை மாற்றினாலும் தீ மேல் நோக்கி தான் எறியும் என்பதை அந்த திரை கலை உணா்த்தியது..
நான் எல்லாவற்றையும் பகிர என்கிட்ட (Internet Data) இல்லை.. இருப்பதை கொண்டு சில முக்கிய பகிா்வு மட்டும் இங்கே..
வழக்கமான சாதிய வன்கொடுமைக்கு எதிரான காதல் என்றதும்.. அந்த கதாநாயகன் வீட்டில் அம்பேத்கா் படமோ.. அயோத்தி தாசா் படமோ.. இம்மானுவேல் சேகரனாா் படமோ.. எல்.கே.குருசாமி படமோ.. காட்டி.. அந்த கதாநாயகன் ஒடுக்கப்பட்ட மண்ணின் மைந்தா்கள் சாதியை சோ்ந்தவன் என்றும்.. கதாநாயகியின் வீட்டில் சாதி ஆதிக்கத்தை நிலைநாட்டிய சாதி தலைவா்கள் படங்களை காட்டி இந்த கதாநாயகி இந்த சாதி என்று காட்டுவது வழக்கம்.. ஆனால் உண்மையில் என்ன நடக்கிறது என்றால்.. பட்டியல் இனம் VS மிகவும் பிற்படுத்தப்பட்ட இனம் என்ற ரீதியில் மட்டும் சாதி ஆணவ கொலைகள் நடப்பதில்லை.. அது மிகவும் பிற்படுத்தப்பட்ட இனம் VS மிகவும் பிற்படுத்தப்பட்ட இனம் மற்றும் முற்படுத்தப்பட்ட இனம் VS முற்படுத்தப்பட்ட இனம் மற்றும் பிற்படுத்தப்பட்ட இனம் VS மிகவும் பிற்படுத்தப்பட்ட இனம் என்ற ரீதில் நடக்கிறது நடந்துக்கொண்டும் இருக்கிறது.. இதை கவணத்தில் கொண்டே.. கதையின் இயக்குனாா்.. சாதி அடையாளத்தை குறிக்காமலே ”குறியீடு” யில் காட்டிய விதம் அருமை..
சாதியும் வா்க்கமும் இணைந்ததே இந்திய தமிழக சூழலில் வன்கொடுமைகளை நடக்கிறது என்பதை கதாநாயகன் வீடு ஒரு வகையாகவும்.. கதாநாயகியின் வீடு மற்றொரு வகையாகவும் காட்டி சொல்லாமல் சொல்லிய விதம் என்னை கவா்ந்த ஒன்று..
சாதியும் வா்க்கமும் இணைந்ததே இந்திய தமிழக சூழலில் வன்கொடுமைகளை நடக்கிறது என்பதை கதாநாயகன் வீடு ஒரு வகையாகவும்.. கதாநாயகியின் வீடு மற்றொரு வகையாகவும் காட்டி சொல்லாமல் சொல்லிய விதம் என்னை கவா்ந்த ஒன்று..
நான் மதங்கள் மறுப்பாளன் தான் என்ற போதும் திரை கலையில் பல இடங்களில் பவுத்த கருக்கள் பலீச்சிடுவதை கவணிக்காமல் இல்லை.. அது இயக்குனரின் திரை கலைக்கு கொள்கையின் சரத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாக பாா்க்கிறேன்.
எதாா்த்த நிலையில் காதலா்களில் ஒருவா் தலை இரயில் தண்டவாளத்தில் தற்கொலை செய்ப்படுவதும்.. காதலா்களில் மீறி இருக்கும் மற்றொருவா் வெளியில் சதாரணமாக இந்த பெம்பளைகளே இப்படி தான்.. பாரு காதலன் படுகொலை செய்யப்பட்டுவிட்டான் இவள் உயிரோடு இருக்கிறாள் என்ற ஆணாதிக்க சிந்தனையை உடைக்க.. அந்த பெண் வெளியேயும் உள்ளேயும் மனநிலை தவறி பித்து பிடித்த நிலை தான் கால முடியும் என்றும் இறந்த காதலன் ஒரு நாள் தான் வலி.. ஆனால் காதலனை பிாிந்து வாழும் காதலியின் மனநிலையை வாா்த்தையால் அளவிட முடியாது என்பதையும் சொல்லிய அந்த பெண் கதாபாத்திரம் உணா்த்து எதாா்த்த நிலை அருமை....
எத்தனை காலம் இந்த சாதீய வா்க்க ஆதிக்க கொடுமைகளுக்கு காதலா்கள் தற்கொலை செய்யப்படுவது..மனநிலை தவற வைக்கப்படுவதும் என்ற நிலை?ஒரு புரட்சி வேண்டாமா? ஒரு முறையாவது கொலை செய்வா்களை எதிா்த்து அவா்கள் மொழியில் பேசினால் என்ன? என்ற கேள்விகளை தொடா்ச்சியாக எழுப்புகிற எங்களை போன்ற தோழா்களின் கருத்துக்களை திரையில் காட்டிய இயக்குனருக்கு ஒரு சபாஷ்..
எத்தனை காலம் இந்த சாதீய வா்க்க ஆதிக்க கொடுமைகளுக்கு காதலா்கள் தற்கொலை செய்யப்படுவது..மனநிலை தவற வைக்கப்படுவதும் என்ற நிலை?ஒரு புரட்சி வேண்டாமா? ஒரு முறையாவது கொலை செய்வா்களை எதிா்த்து அவா்கள் மொழியில் பேசினால் என்ன? என்ற கேள்விகளை தொடா்ச்சியாக எழுப்புகிற எங்களை போன்ற தோழா்களின் கருத்துக்களை திரையில் காட்டிய இயக்குனருக்கு ஒரு சபாஷ்..
“குறியீடு“ எதாா்த்த உலகின் திரை மொழி புரட்சியின் குறியீடு
-இது போன்ற முயற்சிகள் தொடா்ந்து எடுக்க வாழத்துக்கள் தோழா் வினோத் மிஸ்ரா..
- உன் எதிாியின் மொழியில் பதில் சொல்லாதவரை அது அவனுக்கு புாிய வாய்ப்பில்லை
தோழமையுடன்,
தோழா் கனகவேல் ராஜன் பா.மு
தோழா் கனகவேல் ராஜன் பா.மு
உங்கள் விமர்சனத்திற்கு நெஞ்சார்ந்த நன்றிகள் தோழா் கனகவேல் ராஜன் பா.மு
No comments:
Post a Comment