Wednesday 30 September 2015

பௌத்த களப்பணியில் நான் .


பௌத்த களப்பணி 





புகைப்படம் ஒன்று : எங்கள் தம்ம யாத்திரை பயணத்தில் பாண்டிய நாட்டு அண்டிபட்டி ஊரில் உள்ள ரோசனப்பட்டி கிராம விவசாய பூமி அருகே கிடைத்த புத்த சிலை. இவ்விடத்தில் ஒரு கிராமம் அழிந்துபோனதாக தடையங்கள் உள்ளன.





























புகைப்படம் இரண்டு : மலையில் கண்ட புத்தர் சிலையும் அதை தொண்டு தொட்டு வழிபட்டு வரும் அம்மலையருகே இருக்கும் விவசாய குடிகளும்











 .

தமிழ் நாட்டின் பௌத்த அடையாளம்

சோழ நாட்டில் பௌத்த அடையாளம்:

புகைப்பட அடையாளம் பேரரசன் ராஜா ராஜா சோழன் கட்டிய தஞ்சாவூர் பெரியகோவிலில் பொறிக்கப்பட்டுள்ளது. தஞ்சை மற்றும் நாகை போன்ற மாவட்டங்களில் அதிகமான விவசாயக் குடிகள் அதாவது தேவேந்திர குல வேளார்கள் வாழ்ந்துவருவது நாம் அனைவரும் அறிவோம்.
இவ்வாறு பொறிக்கப்பட்ட ஆவணங்களில் இருந்து நமக்கு கிடைக்கும் வரலாற்று தகவல். பௌதத்தின் வீழ்ச்சியோடு தேவேந்திர குல வேளாளர்களின் வீழ்ச்சியும் பொருந்தியுள்ளது. வீழ்ச்சயின் சமயத்தில் தான் தேவேந்திரகளின் சொந்த இடங்கள் பறிக்கப்பட்டு "சைவ மதம்" வளர்ப்பு என்று இக்கோவிலுக்குள் சுருட்டப்பட்டுள்ளது.இதன் தொடர்ச்சியே இன்று தஞ்சை மற்றும் நாகப்பட்டினம் போன்ற மாவட்டங்களில் நாம் நிலமற்ற விவசாய கூலிகளாக இருந்து வருகின்றோம் .











ஆக ராஜா ராஜா சோழன் நிறுவியதாக சொல்லப்படும் சிவன் சிலையின் காலம் பழமையானது அல்ல தற்கால நிறுவுதலே.அது சிவன் கோவிலா அல்லது பௌத்த கோவிலா என்பதை நாம் ஆராயவேண்டும் காரணம் ராஜா ராஜா சோழனின் சதைய விழா என்பது தேவேந்திர குல வேளார்களோடு மிகவும் தொடர்புள்ள திருவிழாவாக வரலாறு சொல்லி வருகின்றது.

பாண்டிய  நாட்டில் பௌத்த அடையாளம்:





தம்ம யாத்திரை ஊர் தேனி ஆண்டிப்பட்டி. அங்கே இரண்டு புத்தர் சிலையை கண்டோம் அதில் ஒன்று ரோசனாப்பட்டி என்ற கிராமத்திலும், மற்றொன்று சுந்தராஜன்பட்டி என்ற கிராமத்திலும் பார்க்க முடிந்தது. இதில் வரலாற்று சிறப்பு என்னவென்றாள் இங்விரண்டு ஊர்களும் தேவேந்திர குல வேளாளர்களின் பூர்வீக கிராமமாகும் .



"குற்றம் கடிதல்" அதரவு பதிவு

இந்த ஆண்டு நான் மிகவும் எதிர்பார்க்கும் படம்  "குற்றம் கடிதல்".

குழந்தைகளை குறித்து வெளிவரு படங்கள் அழகியல் என்ற திரைமொழியை விட மிகவும் நுணுக்கமான ஆய்வுகளுக்கு பின்னரே வெளிவரவேண்டும்.அப்படி இல்லையெனில் குழந்தைகள் மீது அழகியில் பாரங்களை ஏற்றிவிட்டு, உரையிடல் தளத்தில் இருந்து கலச்சார மற்றம் என்ற வட்டத்துக்குள் மாட்டிகொள்ள வேண்டிய அவசியம் கிட்டும்.
 சிறந்த எடுத்துகாட்டு :

 இயக்குனர் மணிகண்டன் "காக்கா முட்டை"யில் வெளிபடுத்திய சேரியின் தோற்றமும்.
இயக்குனர் பா.ரஞ்சித் "மெட்ராஸ்" திரைப்படத்தில் மக்களுக்கு காண்பித்த சேரியின் நீகழ்கால திரை அழகியல் தோற்றமும்.
அதன் அடிப்படையில் "குற்றம் கடிதில்" திரைப்படம் குழந்தை பருவத்தின் ஆய்வுகளை முன்னெடுத்து. அதை திரைமொழி அழகியலோடு பொருத்தப்பட்டு, இந்தியாவின் தேசிய விருது என்ற கௌரவமும், ஆஸ்காரின் உலக படிகளிலும் தன்னை நிறுவிக்கொண்டு. நம்மை நோக்கி வரும் செப்டம்பர் - 24 வெள்ளிக்கிழமை வருகின்றது.

சர்வதேச அங்கிகாரம் பெற்ற "குற்றம் கடிதல்" திரைப்படத்திற்கு தமிழ் நாட்டில் திரையிட வெறும் 80 தியேட்டர்கள் மட்டுமே கிடைத்துள்ளது. இருப்பினும் நாம் அனைவரும் "குற்றம் கடிதில்" திரைப்படத்திற்கு தரும் பெரும் ஆதரவே. இத்திரைப்படம் அதிகமாக தியேட்டர்களில் வெளியாகி, அதிகமாக காட்சிகள் திரையீடப்பாட்டு,நாம் மக்களுக்கான திரைப்படமாக மாற்றமடைய செய்வோம்.
"குற்றம் கடிதில் திரைப்படம் வெற்றியடைய வாழ்த்துக்கள்"



நேற்று இரண்டு மராத்திய படைப்புகளில் பயணித்தேன்.

நேற்று இரண்டு மராத்திய படைப்புகளில் பயணித்தேன்.

எனக்கு தெரிந்த உலக சினிமா தரம் என்பது விளிம்புநிலையாளர்கள் கலாச்சாரம் அதன் அழகியல் தன்மை படைப்பாக உருமாறும் சமயம் என்று சொல்லத் தோன்றும். அது போல் இன்றைய இந்தியாவில் உலக தர சினிமாவிற்கான பண்பாடு அன்றில் இருந்து இன்று வரை மண்ணின் பூர்வகுடிகள் மத்தியில் மட்டும் நடைமுறையில் உள்ளது.
ஆனால் உலக சினிமா தாகத்தில் இருந்து வெளிவரும் இயக்குனர்கள் தங்களுக்கான ஆரம்ப படைப்பின் வெளிப்பாடுகளை உலகம் முழுவதும் தேடி வருவர். அத்தேடலில் வெற்றிபெறும் இயக்குனர்களின் படைப்பு பல இடங்களில் மொழிக்கான தன்மைய இழந்து மாற்று படைப்பின் அடி நாதம் தொட்டு மக்கள் மத்தியிலே சென்றடையும். .
உலக சினிமாவின் உச்சம் என்பதை ஈரானிய படைப்புகளாகவே மட்டும் பார்க்கும் படைப்பாளர் அதன் ஆரம்பத்தை அலசிப் பார்க்கமறந்து விடுவது வழக்கம்.ஈரானிய படைப்பாக இன்று நாம் பார்த்து கற்றுக்கொள்ளும் அனைத்தும் மண்ணுக்கான மக்களின் வாழ்வியில் மற்றும் பண்பாட்டை பாதுகாப்பவையே .
அதைச் சற்று தமிழ் நாட்டு திரைப்பட படைப்புகளோடு ஒப்பிட்டு பார்ப்பது தமிழ் உலகத்தரம் அளவுகோல்கள் வெளிநாட்டு படிப்புகளின் இறக்குமதி என்று சொல்வதே மிக சரியாக இருக்கும்.காரணம் ஏதேனும் உலக தர தமிழ் சினிமா காட்சிகள் மண்ணின் மக்கள் தங்களை அடையாளப்படுத்திய தலைவனுக்கு மாலையிடும் காட்சிகள் திரைப்படத்தில் இருந்தால் அக்காட்சி நீக்கப்பட வேண்டும் அல்லது படம் வெளியாவது "தமிழ் குதிரைக்களுக்கு கொம்பு வளர்ந்தால் எப்படி இருக்கும்" என்று நினைப்பதற்கு சமம்.
அந்த வகையில் நேற்று பார்த்த பன்ட்ரி, கோர்ட் 
இரண்டு மராத்திய திரைப்படங்கள்.
பன்ட்ரி- தொழில் ரீதியாக பிரித்து வைக்கப்பட்ட மனிதனை மானமற்ற , உணர்வற்ற நிராயுதபாணியாக இச்சமூகம் உருவாக்கி வைத்து கொள்கின்றது.
அம்மனிதனின் தலைமுறைகளும் அத்தொழிலை மீண்டும் தொடர வேண்டும் என்று சமூகம் அவனிடம் திணிக்க அதை தாங்கிக்கொள்ள முடியாத வளர்பிறை கவரி மான் தன்மான இழப்பின் ஆதிக்கத்திடம் முட்டி மோதி விடுதலை அடைகின்றது.
கோர்ட் - மக்கள் கலைஞனை, மலக்குழி இறப்போடு தொடர்பிட்டு முடக்கும் அதிகார அரசியல்.அவருக்காக போராடும் ஒரு உண்மை வழக்கறிஞரின் செயலாக்கம்.

இவ்விரண்டும் மராத்தி மொழி படமே, மாநிலம் கடந்து எந்த தழுவலும் இப்டங்களில் இடம்பெறவில்லை. இரண்டும் உணர்வோடு ஒட்டி செல்கின்றது. மக்களின் தேவைகளை பேசிய படமே இன்று உலகஅரங்கம் போற்றுகின்றது குறிப்பாக கோர்ட் திரைப்படம் அடுத்த ஆண்டு ஆஸ்கார் விருதுக்கான தேர்வில் இடம் இடம்பெற்றுள்ளது என்பது தனி சிறப்பு .
தமிழுக்கான உலக சினிமா என்பது தேவைகள் உள்ள மக்களின் எதார்த்த வாழ்வியலே அதை அம்மக்களிடம் மட்டுமே தேடுங்கள் அதன் பின்னரே தமிழனின் படைப்பை உலகம் அறியும்.

S .பரியேரும் பெருமாள் BA.B.L - திரைப்பட விமர்சனம்

ஜோதி மகாலட்சுமி (ஜோ)  என்ற பெண்வழி சமூகத்தை மையாக வைத்து  பரியனும், ஜோவின் தந்தையும் தங்களை அளந்து பார்த்துக்கொள்கிறார்கள் . ...