Tuesday 15 December 2015

புத்தவேடு விஹாரில் உள்ள சோழர் காலத்து புத்தர் சிலை.

மானுடமும் , 
இயற்கையின் அதிகார 
ஆட்சியில் பிறந்து, 
சமத்துவதை நோக்கி 
பயணிக்கிறது. 

நமோ புத்தாய.

சாக்கிய முனி புத்தர் பெருமான் கால்பதித்த புத்தவேடு புனித பூமிக்கு சென்ற சமயம் .

                                  புத்த விஹாரில் உள்ள  சோழர் காலத்து புத்தர் சிலை.




புகைப்படம்: புத்தர் இலங்கைக்கு செல்லும் முன்னர் தமிழ்நாட்டில் இறுதியாக தியானம் செய்த இடம் இன்று குன்றத்தூர் மூன்றாம் கட்டளையில் புத்த விஹாராக செயலப்பட்டு வருகின்றது.



இரண்டாம் புகைப்படம் மூன்றாம் கட்டளை புத்த விஹாரில் உள்ள சோழர் காலத்து புத்தர் சிலை இச்சிலை   இன்று அனைவரும்  வணங்கி செல்லும்  நிலையில் உள்ளது.  அனைவரும்  .

"Flood 2015"

"Flood 2015" 

வெள்ள நிவாரணம் பணிக்காக மதுராந்தகம் பயணம் செய்த சமயம். ஊரை விட்டு ஒதுங்கி இருந்தது இருந்த ஒரு பழங்குடி கிராமம் அதை நோக்கி நகர்ந்த போது தான் தெரிந்தது அந்த கிராமத்தில் உள்ள 60 நபர்களும் (குழந்தைகள்,பெரியவர்கள்,பெண்கள்) இரண்டு நாளாக யாருமே உணவு உண்ணவில்லை என்றும் அவர்கள் இருளர் பழங்குடி வகுப்பு என்றும் தெரியவந்து.

இந்த கிராமத்தில் "Flood 2015" முலம் நான் படம் புடித்தது குடியிருப்புகளின் உருவ தோற்றமே.அதில் மேய்ந்து கொண்டு இருக்கும் ஆடுகள், கொக்கரித்து கொண்டு இருக்கும் சேவல்,
தவழ்ந்து ஓடும் நீரின் ஓட்டம்,இதுவே நாம் கண்ணனுக்கு தெரிந்த சென்னையை விட, கண்ணனுக்கு தெரியாத பல சேரிகள் , கிராமங்களில் உள்ள விளிம்புநிலை மக்களின் அவல நிலை ..

உங்கள் கண்பார்வையை கேட்பார் அற்று கிடக்கும் கடலூர் மற்றும் பல கிராமங்கள் நோக்கி திருப்ப இந்த சிறு முயற்சி தான் "Flood 2015"

Technical back bone: Sony cyber shot digital camera (14.1 mega pixel),editing in cyber link.

"Flood 2015"  மௌன ஆவணப்படம் பார்க்க கீழ் உள்ள லிங்கை அழுத்தவும் 


ஆய்வு : தாய்மத வரலாற்றைத் தந்த 2015 கனமழை

பூர்வக்குடிகளின் தாய்மத வரலாற்றைத் தந்த 2015 கனமழை

சமீப நாட்களாகவே இராமநாதபுரத்தை ஒருங்கிணைத்து பல பௌத்த எச்சங்கள் வெளிவர  ஆரம்பமாகின்றன அவற்றை நான்  வரைபடத்தோடு பொருத்திப் பார்க்கும்போது  பல  தகவல்களை நாம்  உணர்ந்துகொள்ள முடிகின்றது.

*அவற்றில் டிசம்பர் 1ஆம் தேதி இராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை அருகே  உள்ள  ஆனந்தூரில் புத்தர்  அமர்ந்த நிலையில் 5 அடி உயரமுள்ள 11ஆம் நூற்றாண்டுச்  சிலைக் கிடைத்துள்ளது.
               
                         புகைப்படம் : புத்தர் சிலையின் வரலாற்று வரையறை





* டிசம்பர் 12 ஆம்  தேதி இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள லாந்தை நகரம் வணிக விவசாயத்தில் சிறந்து விளங்கியுள்ளது மற்றும் அவ்வணிக  நகரம் சங்க காலத்திற்கு முந்தையதாக இருக்ககூடும் என்றும் ஆய்வாளர்களால் சொல்லப் படுகின்றது.

புகைப்படம்  : லாந்தை வணிக நகரமாக என்று சொல்லப்பட்ட வரலாற்று வரையறை
இந்தத்  தகவல்களை  நாம் வரைபடத்தில் பொருத்திப் பார்க்கும்போது புத்தர் சிலை கிடைத்த ஆனந்தூர் மற்றும் லாந்தை நகரம் நேர்கோட்டில்(vertical line ) இருக்கின்றன அதே போல் சங்க காலத்திற்கு முந்தைய வணிக விவசாய நகரமாக லாந்தை இருந்துள்ளது என்ற தகவலோடு ஒப்பிடும்போது 11ஆம் நூற்றாண்டுக்குப் பிந்தைய காலமே சங்க காலம் என்றும் நாம்  அறுதியிட்டுச் சொல்லமுடியும்..இதுபோன்ற பல ஓப்பிடுகளை வைத்து இராமநாதபுரம் ஒரு  பௌத்த செழித்த ஆன்மிக தளம் என்று  தமிழ் மண்ணில்  பௌத்தம் வீழ்ந்தபோது இங்கே ஆதி விவாசயகுடிகளும் வீழ்ந்தனர் என்று சொல்லமுடியும்.
                புகைப்படம்  : வரைப்படத்தில் நான் பொருத்திய இடங்கள்.



தெற்கே பெய்துவரும் கனமழை இன்னும்  எத்தனை எத்தனை வரலாற்றை வெளிக்கொண்டுவரும் என்று  ஆர்வமோடு காத்திருகின்றேன்.

-மழை தொடரட்டும்



S .பரியேரும் பெருமாள் BA.B.L - திரைப்பட விமர்சனம்

ஜோதி மகாலட்சுமி (ஜோ)  என்ற பெண்வழி சமூகத்தை மையாக வைத்து  பரியனும், ஜோவின் தந்தையும் தங்களை அளந்து பார்த்துக்கொள்கிறார்கள் . ...