Tuesday 11 August 2015

பௌத்த- சமண களஆய்வுகளின் தொடர்புகள்.





பௌத்த- சமண களஆய்வுகளின் தொடர்புகள்.
சீவலப்பெரி மருகால் தலை உள்ள புலாவுடையர் சாஸ்தா கோவில் உள்ள காரைக்கால் அம்மையார், சுடலைமாடன்,பேச்சியம்மன், மாடசாமி என்ற மாடன்,மாடத்தி போன்ற காவல் தெய்வங்கள். இவர்களே சாஸ்தா என்று அழைக்கப்படும் நாம் முன்னோர்கள் இவர்களை ஹிந்து கடவுளாக பார்ப்பதே நாம் அறியாமையின் உச்சம்








Wednesday 5 August 2015

எம்மை தலைநிமிர்த்திய சுட்ட வெயில் - அனுபவ தொடர்

எம்மை தலைநிமிர்த்திய சுட்ட வெயில். 

குறும்படங்களை அதிகம் யாருமே பார்க்க கூடமாட்டர் என்று தெரிந்தும். சுட்டில் ஒதுங்கூட நிழலே இல்லாத அந்த மொட்டை மலையில், அடித்த கடினமான வெயிலும் என் படைப்புகள் மீது நம்பிக்கை வைத்து என்னோடு பயணித்த கதாபத்திரங்களின் உழைப்பே மற்றவர்களை பேசவைத்துள்ளது 



"குறியீடு" படத்தி
ல் பணியாற்றிய ஒளிப்பதிவாளர்க்கு மிகவும் குறைந்த வயதே. இன்னும் சொல்லவேண்டும் என்றால் பள்ளி கல்வி முடித்து, கல்லுரியில் முதலாம் ஆண்டு படித்துகொண்டு இருக்கும் மாணவர். எத்தனை குறும்படத்தில் பணியாற்றி இருப்பர் என்றுகூட சொல்ல முடியாது. ஆனால் அவரை நான் தேர்வுசெய் ஒரு பிரேம் போதுமானதாக இருந்தது.

ஒரு பெண் கதாபத்திரத்தை தவிர யாருக்கும் எந்த தொகையும் வழங்கப்படவில்லை.ஆனால் முந்தைய நாளே அறிவிப்பை எனது உதவி இயக்குனர் சொல்லி விடுவார் காலை 6 மணிக்கு வந்துவிட வேண்டும் என்று. அதன் படியே ஒருவர் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்தும், ஒரு பெண்மணி நாகர்கோவிலில் இருந்தும், படத்தில் வேலைசெய்த டெக்னிசியன்களை, உதவி இயக்குனர்களை மற்றும் இதர நடிகர்களை அள்ளிபோட்டுகொண்டு. ஒரு முதியவர் தனது அம்பாசிடரில் காலை 6மணிக்கு லோக்கேசனுக்கு வந்துவிடுவர்

காலை உணவிற்குள், அன்று எடுக்கவேண்டிய காட்சியில் ஐந்து ஷோட்கள், முன்று அல்லது நான்கு டேக்களோடு முடிந்திருக்கும். காலை வேலை போதிய உணவு கூட இருக்காது, மீண்டும் ஷூட்திற்கு செல்வோம். இப்படி பார்த்து பார்த்து பதிவு செய்த படமே "அந்த அம்மா செமயா நடிச்சு இருக்கு, அந்த ஹீரோ தம்பி யாரு ஏதும் படத்தில் நடித்துள்ளாரா என்று பேசவைத்துள்ளது". 





படத்தின் முதல்கட்ட பெயர் பதிவின் பொழுது மனோதத்துவத்தின் தந்தை சிக்மென்ட் பிராயிடு அவர்களுக்கு நன்றி என்றே படம் ஆரம்பமாகும். 

நடைமுறை வாழ்வில் கதையோடு எந்த தொடர்பும் இல்லாத நபர்களை, எதார்த்த பாத்திரமாக மாற்றி கதையின் அடிப்படையில் பயணமிட வைக்கவேண்டும். எந்த ஒரு வசனமும் பேசாமல் காதல், கோபம் இந்த இரண்டையும் உணர்வுகளில் இருந்து வெளிப்படுத்த வேண்டும் காரணம் "குறியீடு" 30 நிமிடம் மௌன திரைப்படம்.

ஒரு சமயம் காட்சிகள் எடுத்தவண்ணம் இருக்கின்றோம், அது அடர்ந்த கள்ளிச்செடிகள் நிறைந்த காடு அதில் படர்ந்து கிடக்கும் கற்கள் வரைமுறை அற்றவை. எங்கள் படக்குழுவிற்கு சமந்தம் இல்லாத நபர் எங்களை நோக்கி வந்து "இங்கே படபுடிப்பு நடத்த யார்,அனுமதி தந்தனர் என்று" கேட்க. நன்றாக சென்ற படப்புடிப்பு சற்று நேரம் நிறுத்தப்பட்து.அதை சுதாரித்த அந்த நபர் ஒரு மப்டி போலிஸ் என்று கூட எங்களுக்கு தெரியாது. தன்னிடம் இருக்கும் அலைபேசியில் அருகில் இருந்த காவல் நிலையத்தில் இந்த தகவலை பதிவு செய்து எங்களின் முகவரி கேட்டுகொண்டு சென்றுவிட்டார்.

மீண்டும் படப்புடிப்பு தொடங்கி அடுத்த 30 நிமிடத்தில் பெரும் காவல் படை எங்களை நோக்கிவந்து வந்தது, அதில் இருக்க காவல்துறையினர் கைகளில் பாதுகாப்பு கவசங்களும் இருந்தது.இந்த படையை ஒரு பெண் s.i வழிநடத்தி வந்தார். மீண்டும் அவரிடம் பேசிக்கொண்டு இருக்க, உங்களை பார்த்தாள் "மிகவும் சந்தேகமாக இருக்கின்றது" என்று சொல்லும் அளவுக்கு எங்கள் உடை அலங்காரம் இருந்தது. ஒருவழியாக இந்த பேச்சுவார்த்தை தான் இறுதி நிலையை அடைந்து மீண்டும் படப்புடிப்பு தொடங்கியது.

இது போல பல தடைகள் மிக எளிதாக தலையில் சுமந்து எனது கதாநாயகன்,உதவி இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் துணையோடு நடந்தேன்.இந்த பயணமே இன்று என்னை வேற்று வகையான இடங்களில் நிறுவிக்கொண்டது. 



இந்த அனுபவத்தை உங்களோடு சேர்ந்து கொண்டாட  "குறியீடு" படம் வெளியீடு நிகழ்வில் பங்கேற்க உங்களை அன்போடு அழைகின்றேன்.

அவனியாபுரம் - மதுரையின் பூர்வகுடி கிராமம்.

எனது கிராமம் மற்றும் அதன் பல பெயர்கள்: 

"அவனிப்ப சேகர சதுர்வேதி மங்கலம்" இதுவே முதல் முதலில் பாண்டிய மண்ணின் ஆட்சி காலத்தில் எனது  கிராமத்தின் முதல் பெயர். அதன் பின்னர் ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்த வடுகர்கள் "அவனி நாராயணபுரம்" என்று பெயரை மாற்றினர்.அதன் பின்னர் ராணி மங்கம்மாள் காலத்தில்"அவனியாபுரம்" என்று பெயர் மாற்றமடைந்துள்ளது, மீண்டும் வடுகர்கள் ஆட்சி அதிகாரத்தால் "பிள்ளையார் பாளையம்" என்று பெயர் மாற்றமடைந்து அனைந்து முக்கிய ஆவணங்களிலும் பதிவுசெய்யப்பட்டு, அதன் பின்னர் மீண்டும் பெயர் மற்றமடைந்து இன்று "அவனியாபுரம்" என்ற பெயரை தாங்கி நிற்கின்றது 
 நான் பிறந்த கிராமம்.அனால்  "அவனிப்ப சேகர சதுர்வேதி மங்கலம்" என்பது தான் முதல் பெயராக இருக்கவாய்ப்பு மிகவும் குறைவு என்பதும் எனது கூற்று.

 
என் கிராமத்தின் பெயர் வரலாறு :

மதுரை மாவட்டத்தில், அதிக நெல் சாகுபடி செய்யும் விவசாயம் நிலமாக "அவனியாபுரம்"மும்  அதற்கு அடுத்ததாகா
"சோழவந்தான்"னும்இருந்துள்ளது  என்று Gesture B.S.Baliga மதுரை வரலாற்று ஆவணத்தில் பதிவுசெய்துள்ளார். . இன்று காலம் கடந்த நிலையில் எங்கள் உறவினர் அதிகம் வசிக்கும் சோழவந்தான் கிராமமே விவசாயம் நிலம் அதிகம் கொண்ட விவாசய பூமியாக இருக்கின்றது.


திருப்புரங்குன்றம் மலையில் உள்ள ஆதி பழங்கால சமணர் சிற்பம் 


குறிப்பு:

*ஒட்டுமொத்தமாக பௌத்த-சமணர்கள் வாழ்ந்த காலத்தில் எனது சொந்த கிராமத்தின் பெயர் "அவனிப சேகர சதுர்வேதி மங்கலம்" என்பது மிகப்பெரிய கேள்விகுறியாக இன்று வரை இருந்து வருகின்றது

*இன்று திருப்புரங்குன்றம் என்பது ஹிந்துக்கள் வாழிபாட்டு (முருகனின் ஆறுபடை விடு) தளமாக இருக்க சந்தர்ப்பம் மிக குறிவு என்று அம்மலையை சுற்றியுள்ள சமணர் படுக்கைகளும், கல்வெட்டு குகை கோவிலிகளும் நமக்கு உணர்த்துகின்றது.



எம் கம்பீர வரலாற்று வாழ்வியில் (Life style).




பிள்ளையார் பாளையம் கண்மாய் 3500 முதல் 4000 ஏக்கர் ஆயக்கட்டு பரப்பு கொண்டது. இன்றைய கோச்சடையில் இருந்து  ஆரப்பாளையம் கடந்து அதாவது பழைய ஒத்தக்கடை (இன்றைய புது ஜெயில் ரோடு) சோம சுந்தரி காலணியை (s.s colony ) கடந்து கடல் போல தோற்றம் கொண்ட  பெரியகுளத்து கண்மாயில் வந்து சேர்கின்றது அதன் எல்லையாக வில்லாபுரம் அமைந்து 
 இக்கண்மாயின் கழிவு தான் பல ஊர்களின் கம்மாய்களை நிறைக்கின்றது. அந்த இணைப்பில் வரும்  புதுக்குளத்து கம்மாயை பெரிய குளத்து கம்மாயோடு இணைத்த  பெருமை   பூவநாச்சியை என்ற பெண்ணை  சேரும்.

பெரிய கண்மாயின் ஆரம்பம் கோச்சடை அதன் முடிவு முத்துப்பட்டி இன்றைய TVS நகர் அதன் முடிவில் இருந்து புதுகுளத்து கண்மாய் அரம்பமாகி இன்று அவனியாபுரம், அயன்பாப்பாக்ககுடி,
சரஸ்வதி நாராயண கல்லூரி வழியாக  மற்ற ஊர்களுக்கு செல்கின்றது

பெரிய கம்மாயிக்கு அடுத்ததாக இருக்கும்  புதுக்குளம் கண்மைக்கு மத்தியில் கருப்பசாமி கோவில் இருந்துள்ளது என்று  இன்றும் இருக்கின்றது என்ற தகவலை தொல்குடி கரையளர்களான எனது முப்பாட்டனின் வாரிசுகளில் ஒருவரான . கேசவக்குடும்பனின் வாரிசான அம்மாசி(லேட்) பதிவு செய்கின்றார்.

ஆக பிள்ளையார் பாளையத்தை மையாக வைத்து பல  கண்மாய்கள் இருந்து அவற்றில் ஒன்று பெரியகுளத்து கண்மாய் மற்றொன்று புதுகுளத்து கண்மாய் மற்றும் பல. 


இந்த கண்மாய்களில் மடைதிறப்பது மற்றும் மடைஅடைப்பது எம் கிராமத்து கரையாளர்களின்  பணி என்பதை தாண்டி இவர்களால் மட்டுமே இச்செயலை செய்ய முடியும் என்பதே உண்மை. ஆகையால் தான் நீர் நிர்வாகத்தை பாதுகாத்த குடும்பர்களை நீர்குடும்பன் என்றும் வயல் உழவுக்கு நீர் திறக்கும் வேலைகளை செய்து வந்த குடும்பர்களை மடைக்குடும்பன் என்றும் தமிழ் வரலாறு எம்
முன்னோர்களை அழைத்துவந்து.

*ஆயக்கட்டு- ஆறு அல்லது அணை போன்ற நீர்நிலைகளின் துணை கொண்டு பாசனம் செய்யப்படும் வேளாண் நிலப்பகுதி







தாய்மடியான நீர் படுக்கைகள்

எம் கிராமத்தின் அருகில் இருக்கும் குளம் மற்றும் கண்மாய்களை, இன்றைய கூகிளில் வரைப்படத்தோடு வண்ணம் தீட்டி அடையாள குறியீடுயிட்டு பொருத்தியுள்ளேன்.

இந்த நீர் படுக்கைகளே, எம் பூர்வகுடி விவசாயிகளின் "தாய்மடி"யாக இருக்க காரணம்.

  சங்க காலம் தொட்டு அதாவது  நீர் மேலாண்மையை பாதுகாத்த காராளர்கள் என்றும்,
ஏறத்தாழ இவர்களே மருத நிலத்தின் பழங்குடி என்றும்  வரலாறு எம்மை அடையாளப்படுத்த 
இக்குளம் மற்றும் கண்மாய்கள் காரணமாக இருந்துவருகின்றது.

குறிப்பாக: பெரிய கண்மாய், புதுகுளத்து கண்மாய், அவனியாபுரம் கண்மாய்,வெள்ளகல் கண்மாய், நாத்தாங்கால் குளம்,கிராமத்தின் பூர்வகுடி விவசாயிகள் வாழ்ந்த இடம், அவர்களின் காவல் தெய்வமான அய்யனார் கோவில், இந்த வரைப்படத்தில் அடையாளப்படுத்தி இருக்கின்றேன்.

தேடுதலில் கிடைத்த பதில் : சைவ சித்தாந்தம் பற்றிக்கொண்ட கடவுள் மறுப்பே எம் மூதாதையார்கள் அழகர் கோவிலில் உள்ள காவல் தெய்வம் 18ஆம் படி கருப்பனுக்கு மொட்டை அடித்து, ஆட்டை பலியிடுகின்றனர் என்பதே வரலாற்று தகவல் .





எனது கிராமத்தின் பழமைவாய்ந்த அடையாளங்களை இன்றைய கூகிளில் வரைப்படத்தோடு வண்ணம் தீட்டி அடையாள குறியீடுயிட்டு பொருத்தியுள்ளேன். 

குறிப்பாக: கிராமத்தின் நுழைவாயில், கிராமத்தின் எல்லை,பூர்வகுடி விவசாயிகள் வாழ்ந்த இடம், அவர்களின் குல தெய்வ கோவில்,காவல் தெய்வத்தின் கோவில்,இந்த ஊரில் உள்ள "காலாங்கரை" மற்றும் கண்மாய்களை இந்த வரைப்படத்தில் அடையாளப்படுத்தி இருக்கின்றேன்.
எமது கிராமத்தின் எல்லை சாமியான அய்யனார் 





இன்று அவனியாபுரத்தின் எல்லையாகவும் அயன்பாப்பாக்குடியின் ஆரம்பமாக திகழும் "அய்யனார் கோவில்" எமது முன்னோர்கள் உருவாக்கிய வழிபாட்டு தளம் இருந்துள்ளது. ஆகையால் தான், அக்குதுரையில் இருக்கும் அய்யனார். அவனியாபுரத்தில் நாங்கள் வசிக்கும் தந்தை பெரியார் நகர் நோக்கி இருக்கின்றது, என்று எங்களின் முதாதையர் தங்களின் வாரிசுகளுக்கு சொல்லி வைத்துள்ளனர். 

அய்யனாரை எங்களின் காவல் தெய்வமாக வணங்க சொல்லப்பட்டு வந்த பேய் கதைகள்: 

இந்த அய்யனார் எங்களின் காவல் தெய்வம் என்றும், எந்த பேய்களையும் எங்கள் ஊருக்குள் அண்டவிடாமல் பாதுகாக்கவே. இரவு ஒரு குதிரை சப்தம் கேட்கும், அந்த குதுரையில் நாம் ஊர்களில் பதுங்கி இருக்கும் (பேய்களை) திருடனை புடிக்க அய்யனார் வருகின்றார்.
ஆகையல் அய்யனார் நமது தெருக்களில் இரவு நேரம் பயணிக்கும் போது, வீதியில் யாரும் தங்களது கால்களை நீட்டி உறங்கக்ககூடாது, அப்படி உறங்கினால் அடுத்தநாள் காலையில், இவர்களின் தலைவைத்த பக்கம்நோக்கி, இவர்களின் கால்கள் திருப்பிப் போடப்பட்டு இருக்கும் என்று எங்கள் கிழவன் / கிழவிகள் சொல்லி வருவார்கள். நானும் அதை கேட்டு நடுங்கி இரவு 12மணிக்கு முன்னரே கண்முடி துங்கிய காலங்கள் இருக்கின்றது. இதுவே என்று எங்கள் கிராமத்து குழந்தைகளுக்கு காவல் தெய்வமான அய்யனாரை தெய்விக கதாநாயகனாக பார்க்கவைத்து பேய் கதைகள்

எங்கள் கிராமத்தின் நுழைவாயில் மற்றும் அதன் எல்லை: 

பழங்காலத்தில் எமது கிராமத்தில் இருந்து அய்யனார் கோவிலுக்கு எடுக்கப்படும் முளைப்பாரிகள் எங்கள் கிராம நுழைவாயில் இருக்கும் வாய்களில் கரைக்கப்பட்டது வந்துள்ளது. இன்று நாங்கள் அதை "காலாங்கரை" என்று சொல்லிவருகின்றோம்.அதை நீகழ்காலத்தோடு பொருத்தி பார்க்கும்போது,
எங்கள் கிராமத்தின் ஆரம்பம் இந்த "காலாங்கரை" வாய்க்காலும், கிராமத்திற்கான முடிவை அதாவது எல்லையை தேடிவரும் சமயத்தில் தான் எமது மூதாதையர்கள் அங்கே அய்யனார் என்ற காவல் தெய்வத்தை நிறுவி வாங்கியுள்ளனர் என்பது தெரியவருகின்றது.

குறிப்பு

*காலாங்கரை-ஏரிக்கு நீர் கொண்டு வருங்கால்வாய்.

*எங்கள் மூன்னோர்கள் என்றுமே சிவனை வாங்கியவர்கள் இல்லை என்பதை பல சான்றுகள் வைத்து நிரூபிக்க முடிகின்றது.

*பூர்வகுடி விவசாயிகளான எங்கள் வீடுகளில் பிறந்த குழந்தைகளுக்கு முதல் மொட்டை இன்று வரை
அழகர் கோவிலில் எடுத்து வருகின்றோம் என்பது தொண்டுதொட்டு வரும் நடைமுறை.




மதுரையின் பூர்வகுடிகளும். மதுரை மண்னை வளமடைய செய்த விவசாய பழங்குடிகள் என்பதற்கு பல ஆதாரங்கள் இன்றுவரை நடைமுறை யில் உள்ளது.எனது முப்பாட்டனுக்கு நான்கு வாரிசுகள். அவர்களின் பெயர் பூச்சி, கேசவன், குள்ளன்,முத்து (குடும்பர்கள்).  எனது பாட்டனாரின் பெயர் பூச்சி குடும்பன் எனது தாத்தா பெயர் அழகு குடும்பன் . எங்கள் முண்ணோர்கள் சோனை என்ற காவல் தெய்வங்களை வணங்கி வந்துள்ளனர்.

வைகை ஓடிய மாமதுரையின் வீடியோ 



ஊர் குறிப்பு சொன்னவர்கள் 


எங்கள் ஊரில் ஆனிச்சி கிழவி பாடும் நடுவத்தோழி பாடலில் மழை வருவதாக நாகம்மா கிழவி சொல்கின்றாள்.இந்த பாடலை பாடும் பாட்டி 20 வயது இருக்கும் போது நாகம்மாள் கிழவிக்கு வயது 7. இன்று நாகம்மா கிழவி பாடும் நாட்டுப்புற பாடல் இரண்டு கிழவிகளிடம் இருந்து தான் பெற்றுவந்ததாக செல்கின்றாள் . அவர்கள் பெயர் பந்தி கிழவி,கருத்தமனக்கி இவர்கள் இறக்கும்போது இந்த கிழவியின் வயது 7.



மீண்டும் பயன்ப்படுவேன், என் கிராமத்தின் பெருமயை இந்த உலகம் அறிய.

நான் ஏன் பௌத்த சமண தத்துவத்தை நம்புகின்றேன்.


2015 ஜூன் 15 இருந்து  19 வரை  தொடர் பௌத்த வரலாற்று ஆய்வின் நிமித்தமாக மூன்று பள்ளியம்பதிகளுக்கு (மலைகளுக்கு) பயணித்து வந்தேன். இவ்வகை ஆய்வுகளுக்கு நான் எடுத்துக்கொண்ட செயல்முறை: "ஒருங்கினைந்த கிராம செயலாக்க முறை" (Participatory Rural Appraisal). எனது செயலாக்க முன்னோடியாக (Review of doctorates) ஐயா அயோத்திதாஸ பண்டிதர் அவர்களையும், பேராசிரியர் தருமராஜ் ஆவணங்களை தொடக்க கருவியாக ஏற்றுகொண்டேன்.


‘பள்ளியம்பதிகள்’ என்றால் என்ன.

’பதி’என்றால் குன்று, பள்ளிகள் நடைபெறும் குன்றுகளுக்குப் பெயர் ‘பள்ளியம்பதிகள்!’
- அயோத்திதாஸ பண்டிதர்

பேராசிரியர் தருமராஜ் அவர்களின் ஆய்வில் இருந்து வெளிப்படும் பள்ளியம்பதிகளின் விளக்கம்
விவசாயக் கிராமங்களின் கல்வித் தேவைகளையும் மருத்துவத் தேவைகளையும் கவனித்துக் கொள்ள குன்றுகளில் கற்படுக்கைகளைத் தயார் செய்து பௌத்தத் துறவிகள் வந்து தங்கலானார்கள். குழந்தைகளுக்கான கல்வி இங்கு கற்பிக்கப்பட்டது;மனிதர்களுக்கும் கால்நடைகளுக்கும் மருத்துவம் பார்க்கப்பட்டது. இதனால் இக்குன்றுகளுக்குப் பொதுவாகப் ‘பள்ளி’ என்ற பெயர் வழங்கப்பட்டது.இப்படியே தமிழகமெங்கும் வேளாண்மையை மையப்படுத்திய ‘பள்ளியம்பதிகள்’ எராளம் தோன்றின.

இத்தகைய பள்ளியம்பதிகள் வேளாண்மையை அடிப்படையாகக் கொண்டபத்துப்பதினைந்து கிராமங்கள் இணைந்து பள்ளியம்பதிகள் உருவகப்பட்டு இருக்கின்றது. இவற்றையெல்லாம் இணைக்கிற கண்ணியாக பௌத்த பள்ளிகள் இருந்திருக்கின்றது.
-பேராசிரியர் தருமராஜ்.


இவ்வகை ஆய்வுகளில் நான் தொகுத்த ஆவணமாக நான் கிளிக் செய்த புகைபடங்களும், அங்கே மக்களிடம் திரட்டிய பேச்சுவழக்கு வரலாறுகளும். இது முதல் ஆரம்ப பயணம், பல இடங்களுக்கு பயணப்பட இருகின்றேன். இந்த ஆய்வில் நான் உணர்துகொண்ட உண்மை "மலைகள் மீது செல்லுங்கள்,உங்கள் வரலாறு உங்களுக்கு புரியும் ".இன்று எனது பயணம், தமிழ் சமூகத்தின் முன்னோடிகளை தேடி. அதில் நான் சொல்ல வருவது, "நாங்கள் பௌத்த-சமண வம்சா வழி விவசாய பழங்குடியினர்" என்ற வரலாற்று உண்மையை உணர்த்த.

நான் ஏன் பௌத்த சமண தத்துவத்தை நம்புகின்றேன்.

தத்துவ மதங்களான பௌத்தமும் சமணமும் தீர்க்கதரிசிகளால் தத்துவத்தையே முன்வைத்தாலும் அவர்களின் பகுப்பாய்வு நம்பிக்கை சார்ந்தது அல்ல, தத்துவம் சார்ந்தது. நமது சிந்தனையிலும் வாழ்க்கைமுறையிலும் பௌத்த- சமண தத்துவத்தை உள்வாங்கிக்கொள்வதையே முன்வைக்கின்றன. அந்த தத்துவத்தை முழுமையாக நம்பி ஏற்கவேண்டுமென அவை சொல்வதில்லை. மாறாக அந்தத் தத்துவத்துடன் விவாதிக்க தயாரக இருக்கின்றது தாவோ மதத்தைச் சேர்ந்தவர் பௌத்தராகவும் இருக்கமுடிகிறது. சமணத்தின் ஐந்து ஆசாரங்களையும், அடிப்படை நெறியாகிய பிரபஞ்ச சுழற்சியையும் ஏற்றுக்கொண்டாலே ஒருவர் சமணராகலாம். .பௌத்த சமணர்கள் எந்த எல்லைக்குள் நின்றுகொண்டும் அவர்களின் குலதெய்வத்தை வழிபடலாம். ஆசாரங்களைக் கடைப்பிடிக்கலாம்.பௌத்தம் –சமணம் செய்வது மதமாற்றம் அல்ல தத்துவப்பரிமாற்றம் அவை பரப்புவது மதத்தை அல்ல, தத்துவத்தை.

எம்மை யார் என்று அடையாளப்படுத்திய, குலதெய்வங்களை சைவம் என்ற வர்ணத்தில் வைத்து அழித்தொழிந்து போக செய்யாமல். எம் மக்களை பாதுகாத்து, எம் பாரம்பரியத்தை பாதுகாத்து, எம் கலாச்சரத்தை பாதுகாத்து, எம் குலத்தொழிலை பாதுகாத்து, எம் குலதெய்வங்களை பாதுகாத்த காரணத்தினால். எமது வாழ்நாள் நன்றிகடனாக பௌத்த சமண தத்துவத்தை நான் எற்றுகொள்கின்றேன்.


புகைப்படம் : கழகுமலையில் உள்ள பௌத்த சமணர்கள் பள்ளி . எமது மூதாதையர்கள் வாழ்வியில் பாடம் படித்த இடம் .


பௌத்த- சமண வரலாற்று அடையாளம் உள்ள கழுகு மலையில் இருக்கும் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட வெட்டுவான் கோவில் 

வெட்டுவான் கோவில் ஒரே கல்லீல் [MONOLITHIC]
செதுக்கப்பட்டுள்ளது.பெரிய மலைப் பறையில் ஏறக்குறைய 7.50 மீட்டர் அழத்திற்குச் சதுரமாக வெட்டியடுத்து அதன் நடுப்பகுதியைக் கோயிலாகச் செதுக்கியுள்ளனர்.இது பாண்டிய மன்னரால் தோற்றுவிக்கப்பட்ட ஒற்றைக்கற் கோவிலாகும்.கோயிற்பணி  முற்றுப் பெறவில்லை சிகரம் மட்மே முற்றுப் பெற்றுள்ளது. இதன் காலம் கிபி 8ஆம் நூற்றாண்டாகும்.






குறிப்பு : வரலாற்று சிறப்பு வாய்ந்த சமண பள்ளிகள்
இங்கே நடத்தப்பட்டுள்ளது இந்த பள்ளிகளில் படித்தவர்களே பள்ளர்கள்(தேவேந்திர குல வேளாளர்கள் * குடும்பர்கள்) என்றும் அழைக்கப்பட்டு வந்தனர். இந்த கழகுமலையை சுற்றி விவசாய பூமி அறுவடை செய்யப்பட்டுள்ளது இங்கே விவசாய குடிகள் பூர்வகுடிகளாக இருந்துள்ளனர் என்பதை இந்த அடையாளத்தை வைத்து சொல்லிவிட முடியும்...





சங்கரன் கோயிலுக்கு வடமேற்கே பத்துமைல் தொலைவில் பூர்விக விவசாயகுடிகள் அதிகம் வாழும் வீரசிகாமணி கிராமத்தில் உள்ள புத்தர் பாதம்.



S .பரியேரும் பெருமாள் BA.B.L - திரைப்பட விமர்சனம்

ஜோதி மகாலட்சுமி (ஜோ)  என்ற பெண்வழி சமூகத்தை மையாக வைத்து  பரியனும், ஜோவின் தந்தையும் தங்களை அளந்து பார்த்துக்கொள்கிறார்கள் . ...