Monday 3 October 2016

மடை குடும்பர்களின் வரலாறு மற்றும் கலாச்சாரம்


இது மடை குடும்பர்களின்  வரலாறு மற்றும் கலாச்சாரம் குறித்த பதிவு 

மடைக்குடும்பர்களே (தேவேந்திர குல வேளாளர்களே) மதுரையின் ஆதிக்குடிகள் என்பதற்கான மேலும் ஒரு சான்று .....

எழுத்தாளர் மகாராசன் அவர்களின் பதிவில் இருந்து ஒரு சில வரிகள் .

கீழடி:
"மடைச்சி" வாழ்ந்த
தொல் நிலத்தில்
எம் காலடித் தடங்கள்.

மதுரையின் நிலப்பரப்பெங்கும் தொல்லியல் தடயங்கள்

புதைத்து வைத்திருக்கும் பெருங்களமாய் விரிந்து கிடக்கிறது. பண்பாட்டுப் பழமையும், செழுமையான வாழ்வியல் வரலாறு மொழி

கீழடி எனும் சிற்றூரில் நடைபெற்று வரும் தொல்லியல் அகழாய்வுகள் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழந்தமிழர்களின் வாழ்வியல் தடயங்களை வெளிக்காட்டிக் கொண்டிருக்கின்றன.

தமிழ்நாடு,தமிழி எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ள மண்பாண்டங்களும் கிடைத்துள்ளன. அவற்றுள், மடைச்சி என்னும் பெயர் தமிழி எழுத்துகளால் பொறிக்கப்பட்ட மண் கலயமும் ஒன்றாகும்.

இப்பெயர் வேளாண் குடிகளோடு தொடர்புடையது. பழங்காலம் முதற்கொண்டு இக்காலம் வரையிலும் நீர் மேலாண்மை செய்து வருகின்ற வேளாண் குடிகள் மடைச்சி, மடையர், மடையளவக்கார், மடை வேலைக்காரர் என்னும் பெயர்களால் அழைக்கப்படுகின்றனர்.

*குறிப்பு : மடைக்குடும்பர் வகுப்பை சேர்ந்த ஆண்களை மடைத்திறக்கும் "மடையர்" என்றும் பெண்களை "மடைச்சி" என்றும் அழைப்பர்.




இன்று ஆகஸ்ட் 3 2016 சென்றுவந்த அழகர் கோயில் பயணம்

அதிகமான மாடு வளர்ப்பதை தங்களின் வாழ்வாதாரமாக
 கொண்ட வேளான் விவசாய குடிகள்


தங்களின் வீடுகளில் வளர்க்கப்படும் மாடுகளுக்கு எந்த நோய்களும் தொற்றிக் கொள்ளாமல் இருக்க

வீடுகளில் தனியாக கண்று வளர்த்து அழகர் கோயிலுக்கு அழைத்து சென்று கழுத்தில் பூமாலை காட்டி 18ஆம்படி கருப்பணுக்கு சுடம் ஏற்றி தாங்கள் வளர்த்த மாடுகளை விட்டுவிடுகின்றனர்.



 செப்டம்பர் 17 2016 வேளாண் தொழிலின் அடிப்படை தேவை நீர் மேலாண்மை. அவ்வகை கம்மாய்களிலும் ஏரிகளிலும் தேக்கப்பட்ட நீரைத் திறப்பவர்களே மடை வேலை செய்பவர் என்றும், நீர் கட்டி என்றும், நீர் பாய்ச்சி என்றும், மடைக்குடும்பர் என்றும் வரலாற்றில் பொரிக்கப்பட்டு வந்துள்ளது.




 புகைப்படம்: ஏரி மற்றும் கம்மாயிகளில் தேங்கி நீர் மடை வழியாக வெளியேறும் இடம், மூன்றாம் புகைப்படம்:கம்மாய் அல்லது ஏரியின் நிலப்பரப்பு

No comments:

Post a Comment

S .பரியேரும் பெருமாள் BA.B.L - திரைப்பட விமர்சனம்

ஜோதி மகாலட்சுமி (ஜோ)  என்ற பெண்வழி சமூகத்தை மையாக வைத்து  பரியனும், ஜோவின் தந்தையும் தங்களை அளந்து பார்த்துக்கொள்கிறார்கள் . ...