Monday 3 October 2016

திரு. மலைச்சாமி அவர்களின் களப்பணியும் அதை குறித்த ஆவண பதிவுகள்

செப் :14 , ஒடுக்கப்பட்டோர் விடுதலை அரசியலின் முன்னத்தி ஏர், திரு. மலைச்சாமி அவர்களின் களப்பணியும்அதை  குறித்த ஆவண பதிவுகள்

* விமான நிலையத்திற்காக நிலத்தை கையாக படுத்தும் பொது, 1978 களில் மாவீரன் மலைசாமி தலைமையில் சின்ன உடைப்பு , பெருங்குடி , அவனியாபுரம் போன்ற கிராமத்து மக்கள்.மத்திய அரசுவிடம் வைத்த கோரிக்கை புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் பெயரை வைக்கவேண்டும் என்றனர்.



இதன் வெளிப்பாடகவே பாரதிய தலீத் பேந்தர் இயக்கத்தின் சார்பாக விமான நிலையம் ஆரம்ப நுழைவாயிலில் புரட்சியாளர் அம்பேட்கர் அவர்களின் சிலை நிறுவப்பட்டுள்ளது. இதுவே தென் தமிழகத்தின் முதல் புரட்சியாளர் அம்பேட்கர் அவர்களின் திருவுருவ சிலை அதை திறந்துவைத்தார் புரட்சியாளர் அம்பேட்கர் அவர்களின் மனைவி சபிதா அம்பேட்கர் அவர்களால டிசம்பர் 6 1982 திறக்கப்பட்டது.

* 1980களில் கல்லூரிகளால் படிக்கும் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மாணவர்கள் வருகை பதிவு (Attendance )80சதவித கட்டாயமாக இருக்கவேண்டும் என்று அப்போதைய முதலமைச்சர்கள் எம் ஜி யார் அவர்கள் ஒரு சட்டம் நடைமுறைக்கு கொண்டுவந்தார் .
இச்சட்டத்தை கண்டித்து சுமார் 5000 தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி வகுப்பு மதுரை கல்லூரி மாணவர்களை ஒருங்கினைத்து பெரும் கண்டன ஊர்வலம் நடத்தினார் இந்த நிகழ்வுக்கு பின்னர் அச்சட்டம் தமிழக அரசால் பின்வாங்கபட்டது.



* தமிழகத்தின் "முதல் சாதி ஒழிப்பு மாநாடு"
தேவேந்திர குல மக்களின் அடையாள நாயகன் தேக்கம்பட்டி பாலசுந்தராசு அவர்கள் ஒருங்கிணைக்க. தென்னாட்டு ஸ்பாடக்ஷ் தியாகியார் இம்மானுவேல் சேகரன் தலைமையில் "உலக ஆசான்" புரட்சியாளர் அம்பேட்கர் அவர்கள் அம்மாநாட்டு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டார்.

* 1982 தமிழகத்தின் "இரண்டாம் சாதி ஒழிப்பு மாநாடு" பாரதிய தலீத் பேந்தர் இயக்கத்தால் நடத்தப்பட்டது. அம்மாநாட்டு தலைமைதாங்கினார் மாவீரன் மலைச்சாமி இம்மாநாட்டின் சிறப்பு அழைப்பாளராக புரட்சியாளர் அம்பேட்கர் அவர்களின் மனைவி சபிதா அம்பேட்கர் மற்றும் ராமதாஸ் அத்வலே பங்கேற்றனர். அம்மாநாட்டில் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் பாரதிய தலீத் பேந்தர் இயக்கத்தின் மாநில மாணவர் இளைஞர் அணித்தலைவராக செயல்பட்டார் என்பது வரலாற்று சிறப்பு .

இம்மநாட்டில் 10,000 அதிகமான ஒடுக்கப்பட்ட மக்கள் தங்களை பாரதிய தலீத் பேந்தர் இயக்கத்தில் இணைத்துக்கொண்டனர்.



தன்னுடைய மாணவ பருவத்தில் மதுரை மாவட்ட வாடிப்பட்டி தாலுகா, மாணிக்கம்பட்டி என்ற கிராமத்தில் ஜாதி ஹிந்துக்கள் வாழும் பகுதியில் தாழ்த்தப்பட்ட வகுப்பை சார்ந்தவர்கள் தண்ணீர் எடுத்தார்கள் என்பதினால் காட்டு இராஜா என்னும் தலித் இளைஞனை மிருகத்தனமான ஜாதி இந்துக்கள் கொன்றார்கள் இந்த மிருகத்தனமான செய்கைகளை கண்டித்தும்,கொலை செய்யப்பட்ட காட்டு இராஜாவுக்கு நீதி கோரியும் திரு,மலைச்சாமி அவர்கள் அல்லும் பகலும் பாடுபட்டு 1983 பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி மதுரை கட்டபொம்மன் சீலையிலிருந்து மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகம் வரை.சுமார் பத்தாயிரம் பேருக்கு மேலாக கலந்துகொண்ட கண்டன பேரணியை ஒழுங்கு செய்து அப்பேரணிக்கு தலைமை தாங்கியும் சென்றார் மதுரை மாநகரமே குலுங்கியது.தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைக்கு முதன் முதலில் போராட்ட வடிவில் குரல் கொடுத்தவர் என்ற சிறப்பும் திரு,மலைச்சாமியையே சேரும்,


பேந்தர்களின் தரவுகள் :

 திரு. மலைச்சாமி அவர்களின் தலையின் கீழ் இந்திய ஒடுக்கப்பட்ட சிறுத்தைகள் (தலித் பேந்தர்ஸ் ) பணியாற்றிய மும்பை பேந்தர்களிடம்
இருந்து பெறப்பட்ட தரவுகள்







இந்த தரவுகள் வழியாக தமிழ் நாட்டு  தலித் பேந்தர்கள் ஒடுக்கப்பட்ட பட்டியல் சாதி தமிழ் மக்கள் வாசிக்கக்கூடிய மும்பை போன்ற இடங்களும் தங்களின் இயக்கம் வைத்து அரசியல் செய்தனர் என்பதை தெரிந்துக் கொள்ள முடிகின்றது 


                                 ஆவணம் "தலித் விடுதலை" நாளிதழ்                                 
 பாரதீய தலித் பேந்தர் இயக்கத்தின் நிறுவனர், 
வழக்கறிஞர் A. மலைச்சாமி B.A, B.L.,
அவர்களின் நடத்திய மத இதழ் அதன் பெயர்
 "தலித் விடுதலை" மும்பை பேந்தர்களிடம்
இருந்து  தரவுகள் பெறப்பட்டுள்ளது.










( தரவுகள் தொகுப்பில் )

No comments:

Post a Comment

S .பரியேரும் பெருமாள் BA.B.L - திரைப்பட விமர்சனம்

ஜோதி மகாலட்சுமி (ஜோ)  என்ற பெண்வழி சமூகத்தை மையாக வைத்து  பரியனும், ஜோவின் தந்தையும் தங்களை அளந்து பார்த்துக்கொள்கிறார்கள் . ...