Tuesday 4 October 2016

கவிதையான ராம்குமார்

                                                          "பேத நிலை"

கறுத்த உடலை                                                                                


சுற்றிய வெள்ளைத் துணி.

புழல் சிறை எழுதிய எண்ணிற்கும்

பிணவறையில் எழுதிய எண்ணிற்கும்

நல்லவேளை ஆணவம் இல்லை

அப்பாவியின் வாய்ச் சொல்

நீதிக் கேட்காமல்

தேவதையின் திராசு

நுற்றாண்டு கழிய சமமாக நிற்க்கின்றது

கறுப்புத் துணியால்

கண்ணை கட்டி.

இனி ராம்குமார் சொல்வான்

"எனக்கு ஜாதி இல்லை"

நான் பேத நிலையில் மட்டுமே

இருக்கின்றேன் என்று



                                                               "கறுத்த மகான்"

மகாத்மா காந்தி
உடுத்திய
வெள்ளை நிற
ஆடையில்

மீனாட்சிபுரம்
வந்தது ஒயிட் வேன்

ஆப்ரேஸன் கிரீன்
போல ஆப்ரேஸன் முத்து
என்று கூறி ஆப்ரேஸ ராமில் வந்து முடிய

அறுக்கப்பட்ட கழுத்தை
தன் பக்கம் தற்கொலை என்று ஞானம் தேட

அன்று
மீனாட்சிபுரத்தில்
வெளியேறிய ஒயிட் வேன்

(திரைப்படத்தை போல)
சில நாட்களுக்கு பிறகு

வீடு செல்ல
ஆசைப்பட்ட
ராம்குமாரை

காந்தியிடம்
இருந்து வெள்ளை
ஆடை உறுவப்பட்டு

மீனாட்சிபுரம் நோக்கி வந்தான் அதே ஒயிட் வேனில்

இந்த முறை அவன் உடலில் மூச்சு மட்டுமே பஞ்சம்

ஒயிட் வேன் அதே ஒட்டு விட்டை வந்து அடைய

ஊரே கண்ணீர் வடித்து சொன்னதாம்

வெள்ளை ஆடை உடுத்தி வந்துவிட்டான் மீனாட்சிபுரம் மகாத்மா என்று

இன்று எங்களுக்கு ராம்குமார் ஜெயந்தி


              ***************சென்று வா ராம்குமார்*************
                                               
                                               தம்பி ராம்குமாருக்காக 

                                                புத்தம் சரணம் கச்சாமி
                                     நான் புத்தரிடம் சரணம் அடைகிறேன்
                                                 தர்மம் சரணம் கச்சாமி
                                     நான் தர்மத்திடம் சரணம் அடைகிறேன்
                                                 சங்கம் சரணம் கச்சாமி
                                    நான் சங்கத்திடம் சரணம் அடைகிறேன்

                                தம்பி ராம்குமாருக்காக இன்று எங்கள் வீட்டில் 
             உள்ள சித்தார்த்த கௌதம் புத்தருக்கு நான் ஏற்றிய அஞ்சலி தீபம்









No comments:

Post a Comment

S .பரியேரும் பெருமாள் BA.B.L - திரைப்பட விமர்சனம்

ஜோதி மகாலட்சுமி (ஜோ)  என்ற பெண்வழி சமூகத்தை மையாக வைத்து  பரியனும், ஜோவின் தந்தையும் தங்களை அளந்து பார்த்துக்கொள்கிறார்கள் . ...